Friday, March 30, 2007

மௌனமானவளே..

உன் வார்த்தைகள்
வதைக்கவில்லையடி
என்னை..
ஆனால் ஆளைக் கொல்லுதடி
உன் மௌனம்..
கொன்றாலும்
மீண்டும் மீண்டும்
உயிர்த்தெழுவேன்
ஃபீனிக்ஸ் பறவையாய்...
**

யாரோ சொன்னங்க...பாகம்-1

கடற்கரை மணலில்
நம் நட்பை எழுதினேன்..
அலை வந்து அடித்து
செல்லவில்லை..
படித்துச்சென்றது...
**
மனம் விரும்பி மரணம் வேண்டும்...
மனம் மகிழ்ந்து மண்ணுள் உறங்க வேண்டும்...
பல மனம் அறியா மரணம் வேண்டும்...
மறுபிறப்பு இல்லா மரணம் வேண்டும்...
மயங்கும் உலகின் மனம் தெரியா மரணம் வேண்டும்...
இதை அடைய
இவ்வுலகில் உலகில் நான் என்ன செய்ய வேண்டும்?
**
நிலவென்று சொல்லாதே..
தேய்ந்து போவேன்..
மலரென்று சொல்லாதே..
உதிர்ந்து போவேன்..
நிழலென்று சொல்..
நித்தமும் இருப்பேன்
நீங்காமல் உன்னுடன்..
**
உலகமே
பனியில்
உறைந்தே போனாலும்..
என் உயிர்
மட்டும்
உன் அன்பில்
உருகிக் கொண்டிருக்கும்..
**
நீ விரும்பும்
உயிர்க்கு
உன் அன்பு
புரியாது..
உனை விரும்பும்
உயிர்க்கு
உனையன்றி
வேரொன்றும் தெரியாது..
**
உலகம்
சொல்லியது
நீதான்
என் நட்பு
என்று..
பாவம்..
அதற்குத் தெரியுமா??
நீதான்
என்
உலகம் என்று!!
**
பல நூறு
வருடங்கள்
ஆகுமாமே
வைரம் ஒன்று
உருவாக??
நீ எப்படி
பத்தே மாதத்தில்
பிறந்தாய்
என் தோழி??
**

'பூக்களைப் பறிக்காதீர்'
உன் அன்பு கட்டளையையும்
அத்துமீறினேன்...
உன் கூந்தலைச் சேராமல்
மலர மாட்டேனென்று
அடம்புடிக்கும்
பூக்களுக்காக...
**
முகம்பார்க்கும் கண்ணாடி கூட
உன் முகத்தைதான்
காட்டுகிறது...
கேட்டால்...
'உன் விழியில்தான் கோளாறு'
என்ற நையாண்டி வேறு...
**
உன் விரல் பிடித்து
நடைபயில ஆசைதான்
என்ன செய்ய?
உன்னை காணும் முன்னே
நடைபழகி விட்டேனே!
**

யுகபாரதி கவிதைகள்..

நாம் நின்று பேசிய
நுணா மரத்தை வெட்டி விட்டார்கள்..
நீ
விட்டுப்போன சுவடுகளில்
வெயில் படுமே என்றுதான்
வருத்தப்படும் அந்த மரமும்!
**
ஒரு வழிக் கண்ணாடி
மூலம் உன்னை பார்த்துக்கொண்டிருக்கிறது
என் காதல்;
ஆற்றாமை பூசிய பாதரசம்
அழிந்து உனக்கது
புலப்படும் நாளுக்காக காத்திருக்கிறேன் நான்!
**
திசைகாட்டிகள்

நிறைந்த பாதைகளிலும்
தொலைந்து போகும் நான்
மிகச்சரியாக பிரயாணித்து
உனை அடைந்தது
இந்த காதல் பயணத்தில்தான்!
**
பழங்கஞ்சியும்
பயத்தந் துவையலும்
ஏர் உழும் மாமனுக்கு
எடுத்துப் போவாள்..
அவளுக்குப் பிடிக்குமென்று
ஈச்சம் பழங்களை
துண்டில் மூடித் தருவான்
அவன்..
வானம் பார்த்த பூமியில்
எப்போதும் பெய்தபடி
பிரிய மழை...
**
உடைந்தால் கலங்குவாயென்று
இரப்பர் வளையல்கள் வாங்கினேன்!
நீயோ
அளவு சரியில்லையென்று
இளைக்கத் தொடங்கிவிட்டாயே!
**
உன் முந்தானையால்
தலை துவட்டி விடுவாய்
என்பதற்காகவே
குடை மறந்து
வந்த மழைநாளில்
ஜீன்ஸும்

டிஷர்டுமாய்
நின்றிருந்த உன்னை
என்ன சொல்லி

திட்டுவது
**

கவிதையில்
எல்லாம் சொல்லி
விட முடியாது
உன் அழகை!
எழுதும்போதே
கூடிக்கொண்டிருக்கும்
அழகு
உனக்கே உண்டானது!
**
சாலை பாதுகாப்பு வாரத்தில்
முதல் கட்டமாக‌
உன் க‌ல்லூரிக்கு முன்னே
'ஜாக்கிரதை. இங்கே தேவ‌தைக‌ள் குறுக்கிடும்'
என குறியீடு வைக்க‌
திட்டமிட்டுள்ளதாம் அர‌சு!
**
இருபது கண் ராவணனுக்கு
இருந்தபோதும்
சீதையின்
இரண்டே கண்கள்
என்னபாடு படுத்தியது

எதற்கும் முக்கியமில்லை
எண்ணிக்கை
பதத்திற்கு
ஒரு சோறென்பது
பாமர சாதுர்யம்..
**
வருகை
உன்வீடு
பூட்டியிலிருந்தது
உண்மையெனில்
நான் வந்து சென்றதும்
பொய்யில்லை.
பூட்டியிருக்கும்
போது பார்த்து
ஏன் வந்தாய் என்பதோ
வரும்போது
பூட்டப்பட்டிருந்தது
ஏனென்றோ
எல்லாமாதிரியும்
கேள்விகளைக்
கேட்டுக்கொண்டு
குழம்பிப் போகையில்
நான்
வந்து போனதற்கான
சுவடை
தேடிக்கொண்டிருப்பாய்
தடிமனாய்
பூசப்பட்டிருக்கும்
உன்வீட்டு
சிமெண்ட தரையில்.
**

புடவை
ரகத்திற்கொரு

புடவை வீதம்
கணக்கிட்டால் கூட
முப்பதுக்கும் மேலிருக்கும்
உன்னிடம்.

புடவையில்தான்
நீ அழகென
நூறு முறையாவது
உண்மை பேசியிருப்பேன்.

முழுதும் மூட
முடியாதென்பதே
புடவைகள்
மீதான குற்றச்சாட்டு!

எப்போதும் பேசப்படுவதோ
செய்தி வாசிப்போரின்
புடவைகள்

புடவைகளால்
நேர்ந்த
சிக்கல் எனக்கு
புடவையே
சிக்கலானது
திரௌபதிக்கு...
**
அய்யனார்
ஊருக்குள்
வர முடியாத
அய்யனார்
உட்கார்ந்திருப்பதோ
குதிரையில். .
**
தனி...தனி...
எடை போட்டு
விற்கப்படுகிற
சந்தையில்
தனிப்பூவின் அழகு
செல்லுபடியாவதில்லை.
**

Thursday, March 29, 2007

பொங்கல்!

உங்கள் வீட்டில் பொங்கியது பொங்கல்.
நீ பொங்கலோ பொங்கல் என்றாய்.
அந்தக் குரலுக்குப் பொங்கியது
எங்கள் வீட்டில் பொங்கல்!
**
ஜல்லிக்கட்டுக்கு வந்த

எல்லாக் காளைகளையும்
அடக்கிவிட்டார்கள் வீரர்கள்
ஆனால், ஒரு பசு
எல்லோரையும் தூக்கி வீசிவிட்டுப்
போய்விட்டது..
அது நீதான்!
**
கன்னிப் பொங்கலன்று

பட்டுப் பாவாடை தாவணியில் வந்த நீ
என்னைப் பார்த்ததும் வெட்கத்தில்
உன் தோழிக்குப் பின்னால் ஒளிந்தாய்..
‘இன்று காணும் பொங்கல்
ஒளியக் கூடாது’ என்றேன்.
அதிசயமாய் சொன்ன பேச்சுக் கேட்டாய்..
போற்றி! போற்றி!
இந்த திருநாளுக்கு "காணும் பொங்கல்"
என்று பெயர் வைத்த என் முன்னோர்கள் போற்றி!
**
நீ கடித்துத் துப்பிய கரும்புச்

சக்கை
என் வீட்டு காளை மாட்டுக்கு
சர்க்கரைப் பொங்கல்!
**நன்றி..தபூ சங்கர் ,விகடன்.

இளங்கலை காதலியல்!

பி.எஸ்சி.. லவ்வாலஜி
**
மழை நேரத்தில் தோன்றும்
ஒரு சின்ன மின்னலின் நீளமே
ஆறு கிலோ மீட்டர் இருக்குமாம்..
வெப்பமோ 1200 டிகிரி சி’
அப்பப்பா...
உன் வம்சத்தில்
எல்லாமே சூப்பர் பவர்தானோ!
**
ஐந்து லட்சம் கிலோ மீட்டர்
தொலைவிலிருக்கும் நட்சத்திரத்தில்
எழுபத்தைந்து சதவீதம் ஹைட்ரஜன்
என்று துல்லியமாகக் கண்டறிய
இருக்கிறது விஞ்ஞானம்
பக்கத்து வீட்டிலிருக்கும்
உன் இதயத்தில்
நான் இருக்கிறேனா இல்லையா
என்பதைக் கண்டறியத்தான்
ஒரு விஞ்ஞானமும் இல்லை!
**
மீன் கொத்திப் பறவைகள்
தாம் சாப்பிட்ட மீன்களின்
முட்களைக்கொண்டே
கூடு கட்டிக்கொள்கின்றன.
மனங் கொத்திப் பறவை நீயோ
என் இதயத்தில் கூடு கட்டி குடியேறி
பிறகு என் இதயத்தையே சாப்பிடுகிறாய்!
**
தங்கத்தின் மதிப்பு லண்டனிலும்
வைரத்தின் மதிப்பு நெதர்லாந்திலும்
மதிப்பிடப்படுவதாக
செய்திகள் சொல்கின்றன.
ஆனால், இரண்டின் மதிப்பும்
நிர்ணயிக்கப்படுவது
உன் கழுத்தில்தான்!
**
சிங்கத்தை ஒட்டகம்
உதைத்தே கொன்றுவிடுமாம்.
நீ என்னைப் பார்வையாலே
கொன்றுவிடுகிறாய்!
**
நத்தை அதன் கொம்பில்
கண்களை வைத்திருக்கிறது
நீயோ உன் கண்களில்
அம்புகளை வைத்திருக்கிறாய்!
**
நாட்கள் எல்லாம் அழுகின்றன
அவள் பிறந்தநாளாய் பிறக்காததற்காக
**
இந்தியாவில்
ஆளுநர் ஆவதற்கு
35 வயதுக்கு மேல்
இருக்க வேண்டும்.
ஆனால் நீயோ
22 வயதிலேயே
என்னை ஆளுகிறாயே!
**
மின்மினிப் பூச்சிகளில்
அதிகம் ஒளி வீசுவது
பெண் மின்மினிகள்தான்.
அது சரிதான் என்பது
உன் கண்மணிப் பூச்சிகளைப்
பார்த்தாலே தெரிகிறதே!
**
தங்கம் எப்போதும்
தனியாகக் கிடைக்காதாம்.
ஆனால் உன் தாய்
தனியாகத்தானே பெற்றெடுத்தார்
உன்னை!
**
நிலவில் வாயு மண்டலம் இல்லை.
அதனால் அங்கே ஒருபோதும்
மனிதன் பேசினால் கேட்காது.
அதனால்தான் நான் பேசுவதை
எப்போதும் கேட்பதில்லையா நீ?
**
எரிமலை இருந்த, இருக்கும்
இடத்தில்தான் கிடைக்குமாம்
கந்தகம்.
நீ இருக்கும் இடத்தில்தான்
எனக்குக் கிடைக்கின்றன
கவிதைகள்!
**
‘காலியம்’ என்கிற உலோகம்

நம் உள்ளங்கைச் சூட்டிலேயே
உருகி விடுமாம்!
நானோ
உன் நிழலின் சூட்டிலேயே!
**
ஒரு கையால் ஓவியம் வரைந்துகொண்டே
இன்னொரு கையால் எழுதும் பழக்கம்
உடையவர் ஓவியர் லியனார்டோ டாவின்ஸி!
ஒரு கையால் எழுதிக்கொண்டே
இன்னொரு கையால்
தன் கூந்தலையே கோதிக்கொள்ளும்
ஓவியம் நீ!
**
இந்தியாவின்
‘ரோஜா தலை நகரம்’
பூனா.
என்றாலும்
ரோஜாக்களின் தலைநகரம்
உன் கூந்தல்!
**
இங்கிலாந்து நாட்டில் வாழும்
அனைத்து
கறுப்பு அன்னப் பறவைகளும்
இங்கிலாந்து அரசிக்குச் சொந்தமாம்.
இந்தியாவில் வாழும்
அனைத்து
வண்ணத்துப் பூச்சிகளும்
உனக்குச்சொந்தமோ?!
**
என்னைத் தவிரயாரிடமும் பேசாதே!

உன் இதழ்களில் நனைந்து வருவதால்
வார்த்தைகளெல்லாம்
முத்தங்களாக்விடுகின்றன.
**
நன்றி..தபூ சங்கர்

செய்யும் காதலே தெய்வம்...

'கடமையைச் செய்
பலனை எதிர்பாராதே' - இது
கண்ணபிரான் சொன்னது'
'காதலைச் செய்
பலனை எதிர்பார்' - இது
காதல் பிரான் சொல்வது
**
எந்தப் பூங்காவிலும்
அழகான பூக்கள்
காதலர்களே!
**
வீட்டுக்கு ஒரு மரம்
இதயத்துக்கு ஒரு காதல்!
**
நம் காதலியைப் பார்க்கையில்
நம்மை மறந்து விடுகிறோமே
அதுதான் தியானம்.
**
'ஒரு கன்னத்தில் அடித்தால்
மறு கன்னத்தைக் காட்டு' - இது
இயேசுபிரான் சொன்னது.
'ஒரு கன்னத்தில் முத்தமிட்டால்
மறு க்ன்னத்தைக் காட்டு' - இது
காதல் பிரான் சொல்வது.
**
ஆடை இல்லாத மனிதன்
அரை மனிதன்
காதல் இல்லாத மனிதன்
கால் மனிதன்!
**
அன்புக்குத்தாழ்
இல்லை
காதலுக்குக்கதவே
இல்லை!
**
பூமியில் ஒரு காதல்
ஏற்றுக்கொள்ள்ப்படுகிறபோது
வானத்தில் ஒரு நட்சத்திரம் உதிக்கிறது
மறுக்கப்படுகிறபோது
ஒரு நட்சத்திரம் மறைகிறது!
**
அன்பே சிவம்
காதலே சக்தி!
**
சொர்க்கத்தத் தேடி
நீங்கள் போக வேன்டும் என்றால்
ஆன்மிகத்தை நாடுங்கள்!
சொர்க்கம் உங்களைத் தேடி
வர வேண்டும் என்றால்
காதலை நாடுங்கள்!
**
காதல் நதியின்
அக்கரையும் பச்சை
இக்காரையும் பச்சை!
**
உலகத்தின்
முதல் பரிசுப் பொருள்
பூக்கள்தான்!
பரிமாறிக்கொண்டவர்கள்
காதலர்கள்தான்!
**
பாவத்தின் சம்பளம்
மரணம்!
புண்ணியத்தின் சம்பளம்
காதல்!
**
மனித உரிமையில்
முதல் உரிமை
காதலிக்கும் உரிமைதான்!
**
உங்களுக்காகத் துடிக்கும்
உங்கள் இதயத்துக்கு
நீங்கள் செய்யும்
நன்றிக்கடன்
அங்கே ஒரு தேவதையை
குடிவைப்பதுதான்!
**
ஏழு ஜென்மத்திலும்
காதலிக்கப்படுகிற மனிதனே
எட்டாவது ஜென்மத்தில்
கடவுளாகிறான்!
**நன்றி..தபூ சங்கர்

நட்புக்காலம்...

உன்
பிறந்த நாளுக்கான
வாழ்த்து அட்டைகளில்
நல்ல
வாசகம்
தேடித் தேடி
ஏமாந்த சலிப்பில்
தொடங்கிற்று
உனக்கான
என்
கவிதை
**
நீ என்னிடம்

பேசியதை விட
எனக்காகப்
பேசியதில்தான்
உணர்ந்தேன்
நமக்கான
நட்பை
**
உன்னுடன்

சேர்ந்து நடக்க
ஆரம்பித்த
பிறகுதான்
சாலை ஓர
மரங்களிலிருந்து
உதிரும்
பூக்களின் மௌனத்திலும் நான்
இசை
கேட்க
ஆரம்பித்தேன்..
**
புரிந்து கொள்ளப்படாத

நாள்களின்
வெறுமையான
நாட்குறிப்பில்
தாமாகவே வந்து
அமர்ந்திருக்கிறது
எனக்குப்
பிடித்தமான
உன்
புன்னகை!
**
பேருந்து நிறுத்தத்திற்குச்

சற்றுத் தள்ளிநின்று
பேசுகிறவர்கள்
காதலர்கள்..
நிறுத்தத்திலேயே
நின்று
பேசுகிறவர்கள்
நண்பர்கள்..
**
அந்தப் பந்தியில் நான்

மேற்பார்வை
செய்து கொண்டிருக்கையில்
உனது
இலையிலிருந்து
காற்றில் பறந்துவந்து விழுந்து
உடைந்ததே
அந்த
அப்பளத்திற்குத்தான்
முதலில் நாம்
நன்றி சொல்ல
வேண்டும்
**
எனக்குத் தெரியும்

நீ
சாப்பிடும் நேரத்தின்
கடைசி குவளை
தண்­ணீரில்
இருக்கிறேன் நான்..
**
போகிற இடத்தில்

என்னை
விட
அழகாய்
அறிவாய்
ஒருவன்
இருந்து விடுவானோ
என்கிற
பயம்
நல்லவேளை
நட்பிற்கு
இல்லை!
***
எல்லாவற்றிலும்

எனக்குப் பிடித்ததையே
நீ தேர்ந்தெடுத்தாய்!!
உனக்குப் பிடித்ததையே
நான்
தேர்ந்தெடுத்தேன்
அதனால்தான்
நட்பு
நம்மைத் தேர்ந்தெடுத்திருக்கிறது!!
**நன்றி:அறிவுமதி

புயலானவள்...

நான் புயலை ரசிப்பவன்..
ஊடலினூடே வரும்
என்னவளின்
சுவாசம்தானே எனக்குப் புயல் !?
ரசிக்கவே அவளை
ஊடலாய் சீண்டுபவன் நான்..

நான் தென்றலையும் ரசிப்பவன்..
என்னவளின்
சந்தோஷ சுவாசம்தான் அது !?
அதை ரசிக்க
ஊடலில்
தோற்பவனும் நானே...

என்னவளை
தென்றலாய்
நேசிக்கப் பலருண்டு
பாசத்திலும் நட்பிலும்..
புயலாயினும்
அவளை நேசிப்பது
நான் மட்டுமே
காதலில்..

தென்றலானவள் புயலாக
காரணமாயிரம்..
அப்புயலை
தென்றலாய் வீழ்த்தும்
காதலாயிரம்
புரியும் உரிமை
எனக்கு மட்டுமே...

என்னால்
காதலிக்கப்பட்டு
தென்றலாய் வீழவே
புயலாவாள் என்னவள்..

நம்பிக்கையுடன்.....

1. நீ அடுத்தவர்
மீது கொண்ட
நம்பிக்கை
என்பது காசோலை!
நீ உன் மீதே
கொண்ட
நம்பிக்கை என்பது
ஏ.டி.எம் அட்டை!
**
2. கைக்குட்டைகள்
கண்டுபிடிக்கப்பட்டது
கண்ணீர் துடைக்க அல்ல!
வேர்வை துடைக்க!
**
3. புறாவின் மனம் கொள்!

கட்டுவது கூடாயினும்
உயரத்திலேயே கட்டும்.
**

4. மரங்குடைய
கோடாலி கொண்டு
போவதில்லை

மரங்கொத்தி!
அவனவன் கையில் ஆயிரம் ஆயுதம்.
**

5. புதுப்பித்துக் கொள்!
பழைய செடிகளில் பார்
புதிய மலர்கள்..
தினசரி...
**

நன்றி:பா.விஜய்

Wednesday, March 28, 2007

நகுலன் கவிதைகள்...

‘‘நான் இறந்த பிறகு
எனக்கு அஞ்சலிக் கூட்டங்கள்
நடத்த வேண்டாம்.
ஏனென்றால், என்னால் வர முடியாது!’’
*
எந்தப் புத்தகத்தைப் படித்தாலும்
நமக்குள் இருப்பதுதான்
புத்தகத்தில் எழுதியிருக்கிறது;
அதை மீறி ஒன்றுமில்லை!
*
இருப்பதற்கென்றுதான்
வருகிறோம்.
இல்லாமல் போகிறோம்!
*
என்னைப் பார்க்க
வந்தவர்
தன்னைப் பார்
எனச் சொல்லிச் சென்றார்!
*
மிகவும்
நாணயமான மனிதர்..
நாணயம் என்றால்
அவருக்கு உயிர்!
*
வேளைக்குத் தகுந்த வேஷம்
ஆளுக்கேற்ற அபிநயம்
இதுதான் வாழ்வென்றால்
சாவதே சாலச் சிறப்பு!
எனக்கு யாருமில்லை..
நான் கூட!
*
யாருமில்லாத
பிரதேசத்தில்
என்ன நடந்துகொண்டிருக்கிறது?
எல்லாம்!
*
நீயிருக்க
நானிருக்க
நேற்று இன்று நாளை
என்ற நிலை
ஒன்றும் இல்லை
ஒன்றுமே இல்லை!
*
உன்னையன்றி
உனக்கு வேறு
யாருண்டு?
*
ஆர்ப்பரிக்கும்
கடல்
அதன் அடித்தளம்
மௌனம்;
மகா மௌனம்!
*
முக்கோணம்
முடிவில்
ஒரு ஊசி முனை
ஞானம்!
*
வந்தவன் கேட்டான்
‘‘என்னைத் தெரியுமா?’’
‘‘தெரியவில்லையே’’ என்றேன்.
‘‘உன்னைத் தெரியுமா?’’
என்று கேட்டான்.
‘‘தெரியவில்லையே’’ என்றேன்.
‘‘பின் என்னதான் தெரியும்’’ என்றான்.
‘‘உன்னையும் என்னையும்
தவிர வேறு
எல்லாம் தெரியும்’’
என்றேன்!
*

ராமச்சந்திரனா
என்று கேட்டேன்
ராமச்சந்திரன் என்றார்
எந்த ராமச்சந்திரன்
என்று
நான் கேட்கவுமில்லை
அவர் சொல்லவுமில்லை.
*
எழுத்தாளனுக்கும்
வாசகனுக்கும்
நடுவில் வார்த்தைகள்
நி
ற்
கி
ன்

ன!


நன்றி : விகடன்


ஒற்றைப் பார்வையால் அழகாகிறேனடா..

எல்லாப் பெண்களுமே
நிற்கும் காரை கடக்கையில்
அதன் கண்ணாடியில்
தங்களைச் சரி செய்து கொள்கிறார்கள்.
நானோ உன்னைக் கடக்கையில்
உன் முகத்தைப் பார்த்தே
சரி செய்து கொள்கிறேன்.
***

உனக்கேன்
இந்த மாதிரி ஆசையெல்லாம்...
என் வளையலை உடைப்பது,
கொலுசுத் திருகாணியைக்
கழற்றி விடுவது
கூந்தலில் இருக்கும்
பூவைப்பறித்து
உன் கன்னத்தில்
உரசிக்கொள்வது
காதில் தொங்கும்
ஜிமிக்கியை ஆடவிட்டு
வேடிக்கை பார்ப்பது!

ஆனால் ஒன்று
சின்ன வயதிலிருந்து
இந்தத் தோடு,
வளையல்,பூ,கொலுசு
இதெல்லாம் எதற்காக
அணிந்து கொள்ளவேண்டுமென்று
யோசித்து யோசித்து
விடை தெரியாத கேள்விக்கு
உன்னால்தான்
விடை கிடைத்த
மாதிரியிருக்கிறதெனக்கு!
சின்ன வயதில்
சில நேரங்களில்
வெட்கப்பட்டிருக்கிறேன்
ஆனால் அப்போது
வெட்கப்படுவதில்
வெட்கப்படுவதைத் தவிர
வேறு எதுவும் இருந்ததில்லை!
வேறு ஏதாவது
இருக்கும் என்பது
கூட அப்போதெனக்குத்
தெரிந்ததில்லை!
இன்று
மாலை பேசிக்கொண்டிருக்கையில்
சட்டென்று நீ
என் கையை பிடித்து விட்டபோது
உன் கைக்குள் இருக்கும்
என் கையை இழுக்கத் துடிக்கும்
என் பெண்மையிலும்
"வேண்டாம் இருக்கட்டும்"
என்ற காதலிலும்
மாறி மாறித் தவித்த தவிப்பில்......
அப்பா...
வெட்கப்படுவதில்
என்னென்ன இருக்கிறது!!
***
எதற்கெடுத்தாலும் வெட்கப்படுகிறாயே
என்று என்னைக் கேலி செய்யாதே.
இந்த உலகில்
உன்னைத் தவிர
வேறு யாராலும்
என்னை வெட்கப்படுத்த
முடியாது.
***
கட்டிக்கப் போறவனை
"டேய்"
என்று கூப்பிடலாமா என்று
அதட்டுகிறாள் என் அம்மா.
கட்டிக்கப் போறவனைக்
கூப்பிடுவதற்கென்றே
கண்டுபிடிக்கப்பட்ட சொல்தானே
"டேய்"!
***
உன் காதலியாய் இருப்பது
எனக்குப் பிடிக்கவே இல்லை.
கால்பந்து ஆடிவிட்டு நீ
களைப்போடு சாய்கையில்
ஓடிவந்து உன்னை இழுத்து
மடியில்
போட்டுக்கொள்ளத்
துடிக்கும் என் ஆசையை
உன் காதலியாய் என்னால்
நிறைவேற்ற முடியவில்லையே.
அதனால்தான் சொல்கிறேன்
உடனே என்னை
மனைவியாக்கிக் கொள்..
*************
யமுனைதான் எனக்குப்
புண்ணிய நதி
அதுதான் காதல் வாழும்
தாஜ்மஹாலை
தொட்டுக்கொண்டு ஓடுகிறது.
***
என்னிடம் இருக்கும்
எந்த அழகு சாதனத்தை
விடவும்
உன் ஒற்றைப் பார்வை
என்னை அழகாக்கி விடுகிறது.
***

"நீ இல்லாமல்
என்னால் உயிர் வாழ முடியாது"
என்று நீ சொல்வதை நம்பமாட்டேன்.
நீ பிறந்து
மூன்று வருடங்கள்
கழித்துதானே நான் பிறந்தேன்.
அந்த மூன்று வருடங்கள்
நான் இல்லாமல்தானே
நீ
உயிர் வாழ்ந்திருக்கிறாய்
***
நன்றி..தபூ சங்கர்

கிறுக்கல்கள்..

கண்களுக்குள் கண்ணீர்!!!
கருவுற்றதால் தாயாகாமல்
கருணையுற்றதால்
அகில உலகத்திற்கே'
அன்னை' ஆனவளே! - உன்
முக வரிகளில்
மனித நேயத்தின் முகவரி!
உன் ஆத்மா,
காற்றோடு கலந்து விட்டதால் - இனி
அன்பை மட்டுமே நாங்கள்
ஆக்சிஜனாக சுவாசிப்போம்!
**
தோஷம்: சர்ப்ப தோஷம்
பரிகாரம்:
வெள்ளிக் கிழமை தோறும் புற்றுக்கு பால்
ஊற்றி, முட்டை வைக்க வேண்டும்.
என் பிரகாரம்:
தினந்தோறும் ஆதரவற்ற இல்லங்களுக்கு சென்று,
இயன்ற போதெல்லாம் முட்டையும் பாலும் கொடுக்க வேண்டும்.

தோஷம்: செவ்வாய் தோஷம்
பரிகாரம்:
வாழை மரத்தை வெட்டி விட்டு,
பெண்ணுக்கு தாலி கட்ட வேண்டும்.
என் பிரகாரம்:
வாழை மரத்தை விட்டு விட்டு,
வசதி இல்லாத பெண்ணுக்கு
மனமறிந்து மணம் முடித்து வைக்க வேண்டும்.

தோஷம்: புத்திர தோஷம்
பரிகாரம்:
அரசமரத்தை சுற்றி விட்டு,
குழந்தை உருவ பொம்மை செய்து,
தொட்டிலில் போட்டு ஆட்ட வேண்டும்.
என் பிரகாரம்:
யாரோ பெற்று குப்பை தொட்டியில் போட்ட
குழந்தையை எடுத்து வந்து,
நெஞ்சில் ஊறும் பாசம் ஊட்டி வளர்க்க வேண்டும்.

தோஷம்: சனி தோஷம்
பரிகாரம்:
ஆஞ்ச நேயருக்கு துளசி மாலை போட்டு,
அபிஷேகம் செய்ய வேண்டும்.
என் பிரகாரம்:
மன வளர்ச்சி குன்றியவர்களுக்கு,
மருந்து மாத்திரை வாங்கித் தர வேண்டும்.

தோஷம்: பாத சனிக்கு
பரிகாரம்:
திருநள்ளாறு சென்று எள் தீபம் ஏற்ற வேண்டும்.
என் பிரகாரம்:
வெய்யிலில் பாதம் வெடிக்க வேலை செய்யும்
தொழிலாளிகளுக்கு பாத அணிகள் வழங்க வேண்டும்.

தோஷம்: ஆயுள் தோஷம்
பரிகாரம்:
பிரம்மா, விஷ்ணு, சிவனுக்கு முப்பூஜை செய்ய வேண்டும்.
குல தெய்வத்திற்கு அபிஷேகம் செய்ய வேண்டும்.
என் பிரகாரம்:
ஆயுள் முடிவான எய்ட்ஸ் குழந்தைகளை
இருக்கும் வரை சிரிக்கும்படி பார்த்துக்
கொள்ள வேண்டும்.
மூன்று மாதத்திற்கு ஒரு முறை இரத்ததானம்
செய்ய வேண்டும்.

கோவிலில் வரம் கொடுக்கும் கடவுள்கள்
அப்படியே இருக்கட்டும். வாசலில்
கையேந்தும் கடவுள்களை மட்டுமாவது
இல்லாமல் செய்ய வேண்டும்.
இது தேஷதோஷம் தீர
ஒரு பரிகாரம்.

நன்றி: ரா.பார்த்திபன்