Saturday, October 3, 2009

நெஞ்சவர்ணக்கிளி…

உன் வீட்டுக்கும் என் வீட்டுக்கும்
வெகு தூரமாயிற்றே
தினமும் இரவில் தனியாக
என் கனவில் வர
உனக்குப் பயமாக இல்லையா?

நேற்று
எனக்கு உறக்கம் வந்த பிறகுதான்
உன் கனவு வந்தது
இன்று
உன் கணவு வந்த பிறகுதான்
எனக்கு உறக்கம் வந்தது!

உன் கனவில் நான் இருக்கும் போது
என் அறைக் கதவை
யாராவது தட்டினால்
நம்மைப் பாராட்டி
காதல் கைதட்டுவதாகவே
நினைத்துக்கொள்கிறேன்!

மனைவியாக நீ
என்னருகில்
உன் கனவுகளைக் காணும்
நாளுக்காகக் காத்திருக்கிறது
என் உறக்கம்!

இந்தக் கனவுகள் எல்லாம்
சொல்வது ஒன்றே ஒன்றுதான்…
உறக்கத்திலும் நான் உன்னைக்
காதலிக்கிறேன்!

** நன்றி..தபூ சங்கர் ,விகடன்..