Showing posts with label எனக்கான உனக்காக... Show all posts
Showing posts with label எனக்கான உனக்காக... Show all posts

Tuesday, May 29, 2007

நீ!

நான் விருப்பப்பட்டது
என்றும் தொலைவில் தான்..
அன்று நிலவு!
இன்று நீ!
**
உன் அழைப்புக்கள் நிராகரிப்பு,
மின்னஞ்சல்கள் அவமதிப்பு,
குறுந்தகவல் புறந்தள்ளுதல்,
ஓரப்பார்வைகள் ஒதுக்குதல்
இப்படி
என்னவாயினும் செய்வேன்
உன் செல்லக்கோபத்தைப் பெற!
**
உன் நினைவுகளே
வாழ்க்கை
என்றான பிறகு
நீ
தொடுதூரத்தில்
இருந்தாலென்ன?
தொலை தூரத்தில்
இருந்தால் என்ன ?
**
குட்டி போடும்
என்று நினைத்து
குழந்தைகள்
புத்தகத்தில் வைத்திருக்கும்
மயிலிறகு போல்
உன் நினைவுகள்
பத்திரமாய்..
**
செடி கொடி மரத்தில்
மட்டும்தான்
பூ பூக்குமென
யார் சொன்னது??
உன் பெயர் சொல்லி
எல்லோரையும்
என் முகம் பார்க்கச் சொல்!!
**
என்ன எழுதினாலும்,
உன்னுடைய
“அச்சச்சோ!”
“ஊஹூம்…”
“ம்க்கும்!”
“ப்ச்..ப்ச்..”
“ஹேய்…”
…க்களுக்கு முன்னால்
என் கவிதைகள்
தோற்று விடுகின்றன!
**
யாழினிது குழழினிது
மழலை சொல் இனிது
என்றேன்
தோழி, நீ அழைக்கும்
தொலைபேசி மணி
ஓசை கேட்கும் வரை..
**
என் கற்பனை வளத்தை
கொன்றவள் நீ..
என் கற்பனைகள்
உன்னைத் தாண்டிச்
செல்ல மறுக்கின்றன...
**
அத்தி பூத்தது...
உன்னை பார்த்தது
பார்த்த நாள் முதல் -
தினமும் பூத்தது!
**
உன்னிடம் பேச
எவ்வளவு
ஆசைப்படுகிறேனோ
அவ்வளவு ஆசை
உன்னிடம் பேசுபவர்களிடமும்
பேசவேண்டும் என்பதில் .
**
என்னை கொல்ல
வாள் வேண்டாமடி
உன் ஒரு நொடி
மவுனம் போதும்…
**
மன்னித்து விடு!
நான் உன்னை
மறக்க
மறந்துவிட்டேன்….
**
செடியில் பூத்துக்கொண்டே
உன் முகத்திலும்
பூக்க
எப்படி முடிகிறது
இந்தப் பூக்களால்??
**
உபயம்: இணையவலை