Showing posts with label வாசித்ததில் நேசித்தவை... Show all posts
Showing posts with label வாசித்ததில் நேசித்தவை... Show all posts
Thursday, January 30, 2014
Saturday, October 3, 2009
நெஞ்சவர்ணக்கிளி…
உன் வீட்டுக்கும் என் வீட்டுக்கும்
வெகு தூரமாயிற்றே
தினமும் இரவில் தனியாக
என் கனவில் வர
உனக்குப் பயமாக இல்லையா?
வெகு தூரமாயிற்றே
தினமும் இரவில் தனியாக
என் கனவில் வர
உனக்குப் பயமாக இல்லையா?
நேற்று
எனக்கு உறக்கம் வந்த பிறகுதான்
உன் கனவு வந்தது
இன்று
உன் கணவு வந்த பிறகுதான்
எனக்கு உறக்கம் வந்தது!
உன் கனவில் நான் இருக்கும் போது
என் அறைக் கதவை
யாராவது தட்டினால்
நம்மைப் பாராட்டி
காதல் கைதட்டுவதாகவே
நினைத்துக்கொள்கிறேன்!
மனைவியாக நீ
என்னருகில்
உன் கனவுகளைக் காணும்
நாளுக்காகக் காத்திருக்கிறது
என் உறக்கம்!
இந்தக் கனவுகள் எல்லாம்
சொல்வது ஒன்றே ஒன்றுதான்…
உறக்கத்திலும் நான் உன்னைக்
காதலிக்கிறேன்!
** நன்றி..தபூ சங்கர் ,விகடன்..
Wednesday, May 6, 2009
அறிவுமதி கவிதைகள்-3..
செம்மொழி - காரணப் பெயர்
செல்லும் இடமெல்லாம்
செருப்படி
வாங்கி
சிவப்பாய் குருதி வழியும்
உதடுகளால்
பேசப் படுவதால்!
***
பிழைக்கும் வழி
மொன்னைத் தமிழனே!
முதலில் அன்னைத்
தமிழை
அறவே
மற! மற!
பிழைக்க வேண்டுமா?
ஆங்கிலம்கற்றுக் கொள்!
அது போதுமா என்றா
கேட்கிறாய்!
போதும்!
போதும்!
அது மட்டும்
போதும்!
ஆனால்
உயிர்
பிழைக்க வேண்டுமா?
மும்பை என்றால்
மராத்தி
கற்றுக் கொள்!
கர்நாடகம் என்றால்
கன்னடம்
கற்றுக் கொள்!
கொழும்பு என்றால்
சிங்களம்
கற்றுக் கொள்!
***
நீரோட்டம்!
கர்நாடகாவிலும்
இந்து!
அதிகம் படிக்காத
அய்யாவை
நம்பினோம்
நமக்குப்
பல்கலைக் கழகங்கள்
கிடைத்தன !
பல்கலைக் கழகங்களில்
படித்த
இவர்களை
நம்பினோம்
நமது
அறிச்சுவடிகளும்
தொலைந்து போயின !
***
**நன்றி:அறிவுமதி
செல்லும் இடமெல்லாம்
செருப்படி
வாங்கி
சிவப்பாய் குருதி வழியும்
உதடுகளால்
பேசப் படுவதால்!
***
பிழைக்கும் வழி
மொன்னைத் தமிழனே!
முதலில் அன்னைத்
தமிழை
அறவே
மற! மற!
பிழைக்க வேண்டுமா?
ஆங்கிலம்கற்றுக் கொள்!
அது போதுமா என்றா
கேட்கிறாய்!
போதும்!
போதும்!
அது மட்டும்
போதும்!
ஆனால்
உயிர்
பிழைக்க வேண்டுமா?
மும்பை என்றால்
மராத்தி
கற்றுக் கொள்!
கர்நாடகம் என்றால்
கன்னடம்
கற்றுக் கொள்!
கொழும்பு என்றால்
சிங்களம்
கற்றுக் கொள்!
***
நீரோட்டம்!
கர்நாடகாவிலும்
இந்து!
தமிழ் நாட்டிலும்
இந்து!
இந்துக்கு இந்து
குடிநீர் தரமாட்டாயா
இதுதானா இந்துத்துவா
உங்கள்
தேசிய
நீரோட்டம்!
***
அய்யாவை நம்பினோம்
அதிகம் படிக்காத
அய்யாவை
நம்பினோம்
நமக்குப்
பல்கலைக் கழகங்கள்
கிடைத்தன !
பல்கலைக் கழகங்களில்
படித்த
இவர்களை
நம்பினோம்
நமது
அறிச்சுவடிகளும்
தொலைந்து போயின !
***
**நன்றி:அறிவுமதி
ஒரு வலியா இரு வலியா?? [வலி]
நடந்து அழுதமின்னா
நடந்த
எடம்
ஆறாகும்!
நின்னு அழுதமின்னா
நின்ன
எடம்
குளமாகும்!
புரண்டு அழுதமின்னா
புரண்ட
எடம்
கடலாகும்!
★★★
ஒரு வலியா
இரு
வலியா
ஒப்பாரி
வச்சி
அழ!
இது வழியா
அது
வழியா
எங்கேன்னு
போயி
விழ!
★★★
பூன வழி மறிச்சி
போகாதே
என்று சொல்ல
நாயி வழி மறிச்சி
நானும்
வர்றேன்
என்று சொல்ல
வளத்த
பூச்செடிய
வாகாக
வருடிவிட்டு
படிச்ச
படித்துறைய
பாத்து
அழுதுபுட்டு
வாறேன்னு
சொன்னதுமே
வாகை
மரமங்கே
வாடி
அழுததய்யா!
போறேன்னு
சொன்னதுமே
பூவரசு
மரமங்கே
புலம்பி
அழுததய்யா!
★★★
தூங்க மகனுக்கு
அங்க
தூளி
கட்ட
முடியலய்யா!
வெளஞ்ச
மகளுக்கு
அங்க
வேலி
கட்ட
முடியலய்யா!
நாய் குரைக்கும்
சத்தத்துக்கு
நாங்க
நடுங்காத
நாளுமில்ல!
போய்ப் பதுங்கும்
பொந்துக்குள்ள
அய்யோ
புடுங்காத
தேளுமில்ல!
★★★
பட்ட கத சொன்னமின்னா
ஒங்க
மனம்
பத்தி
எரியுமய்யா!
அவுக . . .
சுட்ட கத சொன்னமின்னா
ஒங்க
மனம்
துடிச்சி
எரியுமய்யா!
★★★
எங்கமன வேதனைய
எழுத்தாக்க
நெனச்சமுன்னா
அய்யோ அந்த
எழுத்தாணி
உருகுமய்யா!
பாவி மன
வேதனைய
படமாக்க
நெனச்சமுன்னா
அய்யோ அந்த
படச்சுருளும்
கருகுமய்யா!
★★★
ஒரு வலியா
இரு
வலியா
ஒப்பாரி
வச்சி
அழ!
இது வழியா
அது
வழியா
எங்கேன்னு
போயி
விழ!
★★★
**நன்றி:அறிவுமதி
நடந்த
எடம்
ஆறாகும்!
நின்னு அழுதமின்னா
நின்ன
எடம்
குளமாகும்!
புரண்டு அழுதமின்னா
புரண்ட
எடம்
கடலாகும்!
★★★
ஒரு வலியா
இரு
வலியா
ஒப்பாரி
வச்சி
அழ!
இது வழியா
அது
வழியா
எங்கேன்னு
போயி
விழ!
★★★
பூன வழி மறிச்சி
போகாதே
என்று சொல்ல
நாயி வழி மறிச்சி
நானும்
வர்றேன்
என்று சொல்ல
வளத்த
பூச்செடிய
வாகாக
வருடிவிட்டு
படிச்ச
படித்துறைய
பாத்து
அழுதுபுட்டு
வாறேன்னு
சொன்னதுமே
வாகை
மரமங்கே
வாடி
அழுததய்யா!
போறேன்னு
சொன்னதுமே
பூவரசு
மரமங்கே
புலம்பி
அழுததய்யா!
★★★
தூங்க மகனுக்கு
அங்க
தூளி
கட்ட
முடியலய்யா!
வெளஞ்ச
மகளுக்கு
அங்க
வேலி
கட்ட
முடியலய்யா!
நாய் குரைக்கும்
சத்தத்துக்கு
நாங்க
நடுங்காத
நாளுமில்ல!
போய்ப் பதுங்கும்
பொந்துக்குள்ள
அய்யோ
புடுங்காத
தேளுமில்ல!
★★★
பட்ட கத சொன்னமின்னா
ஒங்க
மனம்
பத்தி
எரியுமய்யா!
அவுக . . .
சுட்ட கத சொன்னமின்னா
ஒங்க
மனம்
துடிச்சி
எரியுமய்யா!
★★★
எங்கமன வேதனைய
எழுத்தாக்க
நெனச்சமுன்னா
அய்யோ அந்த
எழுத்தாணி
உருகுமய்யா!
பாவி மன
வேதனைய
படமாக்க
நெனச்சமுன்னா
அய்யோ அந்த
படச்சுருளும்
கருகுமய்யா!
★★★
ஒரு வலியா
இரு
வலியா
ஒப்பாரி
வச்சி
அழ!
இது வழியா
அது
வழியா
எங்கேன்னு
போயி
விழ!
★★★
**நன்றி:அறிவுமதி
வலி.. - 2
மீனை
அரியும்போது
கிடைத்தது
குழந்தையின்
கண்
★★★
பச்சிளங்குழந்தையை
நெடுக
உளியால்
கொத்தியிருக்கிறார்களே
புத்தர் சிலைக்கு
முயற்சி செய்திருப்பார்களா ?
★★★
சாலைபோடும்
பெரு வண்டியைப்
பார்த்ததும்
பதறிப்போய்
பதுங்குகின்றன
விளையாடிக்
கொண்டிருந்த
குழந்தைகள்!
★★★
மருந்து பற்றி
படித்துக்
கொண் டிருக்கையில்
விழுந்தது மரணம்
★★★
ஆழிப் பேரலைகளும்
எங்கள் பெண்களை
வீடு புகுந்து
இழுத்துப்போய்
கொல்லத்தான் செய்தன
ஆனாலும்….
★★★
**நன்றி:அறிவுமதி
அரியும்போது
கிடைத்தது
குழந்தையின்
கண்
★★★
பச்சிளங்குழந்தையை
நெடுக
உளியால்
கொத்தியிருக்கிறார்களே
புத்தர் சிலைக்கு
முயற்சி செய்திருப்பார்களா ?
★★★
சாலைபோடும்
பெரு வண்டியைப்
பார்த்ததும்
பதறிப்போய்
பதுங்குகின்றன
விளையாடிக்
கொண்டிருந்த
குழந்தைகள்!
★★★
மருந்து பற்றி
படித்துக்
கொண் டிருக்கையில்
விழுந்தது மரணம்
★★★
ஆழிப் பேரலைகளும்
எங்கள் பெண்களை
வீடு புகுந்து
இழுத்துப்போய்
கொல்லத்தான் செய்தன
ஆனாலும்….
★★★
**நன்றி:அறிவுமதி
Tuesday, May 5, 2009
நியூட்டனின் மூன்றாம் விதி - 2 !!
வெண்டைக்காயில் ஒளிந்தவர்கள்!
கிணற்றடித் தண்ணீரை
குடித்து வளரும்
எங்கள் வீட்டிலும்.
வதங்கிச் சுருண்டு
இலைகளில் தொங்கும்
செம்பருத்திப் பூக்கள் தவிர்த்து
அம்மாவினுடையதும்
அக்காவினுடையதுமாக
விரல்களைக் கடன் வாங்கி
பச்சையாய் துளிர்க்கும்
வெண்டைக்காய்ச் செடிகள்
அத்தோட்டத்தின் தனித்தன்மை.
'மூளைக்கு நல்லது' என்று
மருத்துவ குணம் கூறி
அதன் காய்களில் ஒளிந்திருக்கும்
என் அல்ஜிப்ரா கணக்கி இற்கான
விடைகளை நோக்கி
ஆற்றுப்படுத்துவாள் அம்மா.
மதிய உணவில்
பெரும்பான்மை வகிக்கும்
அதன் 'கொழ கொழ' த் தன்மை
வழக்கம்போல் பள்ளியில்
என் விரல்களில் பிசுபிசுத்து
வராத கணக்கைப் போல்
வழுக்கிக் கொண்டிருக்கும்.
முன்புக்கு முன்பு
அதன் காம்புகள் கிள்ளி
கம்மல் போட்டுக்கொள்ளும்
அக்கா இப்போது,
வைரங்களை நோக்கி
விரியுமொரு கனவில்
' உங்களுக்கு வாக்கப்பட்டு
என்னத்தைக் கண்டேன்' என்று
அத்தானிடம் பொருமுகி்றாள்.
கடன்முற்றித் தத்தளித்த சூழலில்
கியான்சந்த் அண்ட் சன்சுக்கு
கைநடுங்கி கையெழுதுத்திட்டு
வீட்டுடன் தோட்டமும்
விற்றார் அப்பா .
முன்வாசலில் தொங்கும்
குரோட்டன்ஸ் செடி கடந்து
பிஞ்சு வெண்டைகள் பொறுக்கி;
கூர்முனை ஒடித்து;
தள்ளு வண்டிக்காரனிடம்
பேரம் பேசுகையில்
இப்போது உணர்கிறேன் ............
ஒவ்வொரு வெண்டைக்காயிலும்
ஒளிந்திருக்கிறார்கள்
மென்மையான
விரல் கொண்ட
ஒரு அம்மா ;
கனவுகள் விரியும்
ஒரு அக்கா ;
கைகள் நடுங்கும்
ஒரு தந்தை ;
மற்றும்
கணக்குகள் துரத்தும்
ஒரு பையன்.
****
மேல் வீட்டுக்காரன்!
மேல் வீட்டுக்காரன்
என்கிற உரிமையில்
நீ கைப்பற்றும் சுதந்திரம்
அதிகப்படியானது.
உன் ஒவ்வொரு அசைவும்
பூதாகரமாய் ஒலிக்கிறது
கீழ்த்தளச் சுவர்களில் .
திட்டமிட்டு நகர்த்தும்
சாமார்த்தியமும் உனக்கில்லை.
பாக்கு இடிக்கும் பாட்டி;
சதுர அம்மியில்
சார்க் புர்ரக்கென்ற
குழவி நகர்த்தும் அம்மா;
ஏதேதோ பாட்டுக்கெல்லாம்
எம்பிக்குதிக்கும் குழந்தைகள்;
என
உன் உறவுகள் கூட
உன்னைப் போலவே.
உன்னை பழிவாங்கும் விதமாக
என்னால் முடிந்தது ஒன்றுதான்.
எனதருமை மேல்தளத்து நண்பா.......
தலையணையையும் மீறி
உன்காதுகளில்
சுழன்று கொண்டிருக்கும்
என் மின்விசிறி.
**நன்றி: நா. முத்துக்குமார்
கிணற்றடித் தண்ணீரை
குடித்து வளரும்
எங்கள் வீட்டிலும்.
வதங்கிச் சுருண்டு
இலைகளில் தொங்கும்
செம்பருத்திப் பூக்கள் தவிர்த்து
அம்மாவினுடையதும்
அக்காவினுடையதுமாக
விரல்களைக் கடன் வாங்கி
பச்சையாய் துளிர்க்கும்
வெண்டைக்காய்ச் செடிகள்
அத்தோட்டத்தின் தனித்தன்மை.
'மூளைக்கு நல்லது' என்று
மருத்துவ குணம் கூறி
அதன் காய்களில் ஒளிந்திருக்கும்
என் அல்ஜிப்ரா கணக்கி இற்கான
விடைகளை நோக்கி
ஆற்றுப்படுத்துவாள் அம்மா.
மதிய உணவில்
பெரும்பான்மை வகிக்கும்
அதன் 'கொழ கொழ' த் தன்மை
வழக்கம்போல் பள்ளியில்
என் விரல்களில் பிசுபிசுத்து
வராத கணக்கைப் போல்
வழுக்கிக் கொண்டிருக்கும்.
முன்புக்கு முன்பு
அதன் காம்புகள் கிள்ளி
கம்மல் போட்டுக்கொள்ளும்
அக்கா இப்போது,
வைரங்களை நோக்கி
விரியுமொரு கனவில்
' உங்களுக்கு வாக்கப்பட்டு
என்னத்தைக் கண்டேன்' என்று
அத்தானிடம் பொருமுகி்றாள்.
கடன்முற்றித் தத்தளித்த சூழலில்
கியான்சந்த் அண்ட் சன்சுக்கு
கைநடுங்கி கையெழுதுத்திட்டு
வீட்டுடன் தோட்டமும்
விற்றார் அப்பா .
முன்வாசலில் தொங்கும்
குரோட்டன்ஸ் செடி கடந்து
பிஞ்சு வெண்டைகள் பொறுக்கி;
கூர்முனை ஒடித்து;
தள்ளு வண்டிக்காரனிடம்
பேரம் பேசுகையில்
இப்போது உணர்கிறேன் ............
ஒவ்வொரு வெண்டைக்காயிலும்
ஒளிந்திருக்கிறார்கள்
மென்மையான
விரல் கொண்ட
ஒரு அம்மா ;
கனவுகள் விரியும்
ஒரு அக்கா ;
கைகள் நடுங்கும்
ஒரு தந்தை ;
மற்றும்
கணக்குகள் துரத்தும்
ஒரு பையன்.
****
மேல் வீட்டுக்காரன்!
மேல் வீட்டுக்காரன்
என்கிற உரிமையில்
நீ கைப்பற்றும் சுதந்திரம்
அதிகப்படியானது.
உன் ஒவ்வொரு அசைவும்
பூதாகரமாய் ஒலிக்கிறது
கீழ்த்தளச் சுவர்களில் .
திட்டமிட்டு நகர்த்தும்
சாமார்த்தியமும் உனக்கில்லை.
பாக்கு இடிக்கும் பாட்டி;
சதுர அம்மியில்
சார்க் புர்ரக்கென்ற
குழவி நகர்த்தும் அம்மா;
ஏதேதோ பாட்டுக்கெல்லாம்
எம்பிக்குதிக்கும் குழந்தைகள்;
என
உன் உறவுகள் கூட
உன்னைப் போலவே.
உன்னை பழிவாங்கும் விதமாக
என்னால் முடிந்தது ஒன்றுதான்.
எனதருமை மேல்தளத்து நண்பா.......
தலையணையையும் மீறி
உன்காதுகளில்
சுழன்று கொண்டிருக்கும்
என் மின்விசிறி.
**நன்றி: நா. முத்துக்குமார்
அறிவுமதி கவிதைகள்-2..
பிணப் பரிசோதனை
அய்யர் குடலிலும்
மலம்.
***
பறையர் சுடுகாடு
படையாட்சி சுடுகாடு
தலைமுழுக
ஒரே ஆறு.
***
தேவர் படித்துறை
பறையர் படித்துறை
அலைகள் மீறின
சாதி !
***
மரக்கிளையில் குழந்தை
வரப்பில் பண்ணையார்
பயிரில் சிந்துகிறது பால்.
***
இரண்டு அடி கொடுத்தால்தான்
திருந்துவாய்!
வாங்கிக்கொள்
வள்ளுவனிடம்.
***
மழைவிட்ட நேரம்
தேங்கிய நீரில்
முகம் பார்த்தது
தெருவிளக்கு.
***
இழந்த உயிர்களோ கணக்கில்லை
இருமிச் சாவதில் சிறப்பில்லை
இன்னும் என்னடா விளையாட்டு
எதிரி நரம்பிலே கொடியேற்று.
வீரத்தைக் குண்டுகள் துளைக்காது
வீரனைச் சரித்திரம் புதைக்காது
நாட்டை நினைக்கும் நெஞ்சங்கள்
வாடகை மூச்சில் வாழாது.!
** நன்றி:அறிவுமதி
அய்யர் குடலிலும்
மலம்.
***
பறையர் சுடுகாடு
படையாட்சி சுடுகாடு
தலைமுழுக
ஒரே ஆறு.
***
தேவர் படித்துறை
பறையர் படித்துறை
அலைகள் மீறின
சாதி !
***
மரக்கிளையில் குழந்தை
வரப்பில் பண்ணையார்
பயிரில் சிந்துகிறது பால்.
***
இரண்டு அடி கொடுத்தால்தான்
திருந்துவாய்!
வாங்கிக்கொள்
வள்ளுவனிடம்.
***
மழைவிட்ட நேரம்
தேங்கிய நீரில்
முகம் பார்த்தது
தெருவிளக்கு.
***
இழந்த உயிர்களோ கணக்கில்லை
இருமிச் சாவதில் சிறப்பில்லை
இன்னும் என்னடா விளையாட்டு
எதிரி நரம்பிலே கொடியேற்று.
வீரத்தைக் குண்டுகள் துளைக்காது
வீரனைச் சரித்திரம் புதைக்காது
நாட்டை நினைக்கும் நெஞ்சங்கள்
வாடகை மூச்சில் வாழாது.!
** நன்றி:அறிவுமதி
உறைந்த நதி!
எத்தனைப் பெண்கள்
கோலம் போட்டாலென்ன
எந்தப் பெண்ணுக்கும்
உன்னடைய விரல்கள் இல்லை
எத்தனைப் பெண்கள்
என்னைப் பார்த்தாலென்ன
எந்தப் பெண்ணுக்கும்
உன்னடைய கண்கள் இல்லை
எந்த நிழலிலும்
உன் ஆறுதல் இல்லை
எந்த வாழ்த்திலும்
உன் குரல் இல்லை
உனது கோலத்தில்
மையம் கொள்ளப்
பூத்திருக்கிறது பூசணி
உன்னை எதிர்பார்த்துக் காத்திருக்கிறது
விலைபோகாமல்
ஒரு பானை
நீராட நீ வராமல்
உறைந்து நிற்கிறது
நம் ஊர் நதி
நீதான்
சொல்லிக்கொள்ளாமலேயே
புறப்பட்டுவிட்டாய்
உனது ஊரிலாவது
கரும்புகள் இனித்தால்
ஒரு கடிதம் எழுது!
**நன்றி: பழநிபாரதி
**நன்றி: பழநிபாரதி
பட்டாம்பூச்சி விற்பவன்!!
பதிவுகள்!
மலை உச்சிப் பாறையில்,
கல்லூரி மரக்கிளையில்,
தியேட்டர் சேரில்,
புழுதி படிந்த
கார் கண்ணாடியில்,
போன்ற பலவற்றில்
சந்தோஷமாய்
எழுதிய என் பெயர்
குறுகிப் போனது
கடன் பத்திரத்தில்.
**நன்றி: நா. முத்துக்குமார்.
மலை உச்சிப் பாறையில்,
கல்லூரி மரக்கிளையில்,
தியேட்டர் சேரில்,
புழுதி படிந்த
கார் கண்ணாடியில்,
போன்ற பலவற்றில்
சந்தோஷமாய்
எழுதிய என் பெயர்
குறுகிப் போனது
கடன் பத்திரத்தில்.
**நன்றி: நா. முத்துக்குமார்.
பழநிபாரதி - கவிதைத்திருவிழா!
நீ இல்லாத போது...
உனக்காக
எப்போதும் வாங்கும்
இரண்டு முடி மல்லிகையை
இன்று
பூக்காரக் கிழவி
விற்காமல் எடுத்துப் போவது
எத்தனைச் சோகமானது!
*
நீ பொரி போட்டுப்
பசியாற்றிய
கோயில் குளத்தின் மீன்கள்
இன்று தண்ணீர் குடித்துத்
தண்ணீர் குடித்து
உன்னைத் தேடிய தவிப்பு
எத்தனை துயரமானது!
*
நீ வராத
வெறுமையில்
பூங்காவின் காவலாளிக்கு
ஒரு புன்னகையைக் கூட
திருப்பித் தராமல்
இன்று நான் வெளியேறுவது
எத்தனை உறுத்தலானது.
***** ***** ***** *****
யாருக்கும் தெரியாதவள்!
உடைந்து கிடந்தன
வளையல் துண்டுகள்!
உதிர்ந்து கிடந்தன
மல்லிகைப் பூக்கள்!
புகைந்து கொண்டிருந்தது
சிகரெட் துண்டு!
கிழிந்து கிடந்தது
ரவிக்கை!
காவல் நிலையத்திற்குப் பின்னால்
ஆணுறைகள்!
கடை வீதியில்
வளையல்
பூ
ரவிக்கை என்று
வந்து போனார்கள்
நிறையப் பெண்கள்
எந்த பெண்ணுக்கும்
தெரியவில்லை
அந்தப் பெண்ணைப் பற்றி.
***** ***** ***** *****
பெயர் தெரியாத கணம் !
பார்க்கக் கிடைத்த
கொஞ்சம் வானத்தில்
எனது தனிமையைப் பகிர்ந்துகொள்ள
வரும் போகும் பறவைகள்!
பெயர் தெர்ந்தவை சில
பலவற்றிற்குத் தெரியாது
எங்கிருந்து
எதுவரைக்குமென
யோசிக்குமுன் கடந்துவிடும்
என்னை அவை
நான் யோசித்துக்கொண்டிருப்பேன்
தடயங்களற்றுப்
பறக்கும் சுகத்தை
வீழ்ந்துவிட்ட நட்சத்திரமாய்
என்னைப்
பார்த்துக் கொண்டிருக்கும் வானம்
***** ***** ***** *****
சாம்பல் பொழுது!
ஊனமான
கோபுரத்தின் இடுக்குகளில்
உற்றுப் பார்க்கின்றன
நசுங்கிய புறாக்கண்கள்!
எங்கும் எதற்கும்
கதவுகள் இல்லை!
யாரும் ஓடித் தப்பிக்க
இயலாமல்
வளர்கிறது
அத்துவானப் பொட்டல்!
மனநோயாளிகளின்
சிரிப்பும் திகைப்பும்
காற்றையும் நெருப்பையும்
தொற்றி
எரிகிறது
வன்முறையிலிருந்து வன்முறை!
எது
எதனுடையதெனத் தெரியாமல்
பாதைகளை மூடுகிறது
சாம்பல்!
***** ***** ***** *****
பொங்கலோ பொங்கல்!
சம்பா செத்த வயலில்
அடர்ந்து கொட்டும் பனியில்
சில்லிடுகிறது நிலம்!
சுழன்று எரியும்
போகியின் நெருப்பில்
உழவர்கள்
கருகும் நாற்றம்!
பிழிந்த கரும்பின்
கழிவுகளில்
எறும்பின் கால்களால்
ஊர்ந்து வருகிறது
தை
பசியில் குழிந்து
எலி வளைகளாகின்றன
விவசாயக் கண்கள்!
அடிமாடுகள் சுமந்து
விரையும் வாகனத்தின்
அடியில் அதிர்கிறது
வயல்களைக் கிழிக்கும் சாலை!
உடைந்து கிடக்கும்
மண்பானையில்
அள்ள முடியாமல்
சிதறிக் கிடக்கின்றான்
என்
சொல்லாரிசிகள்!
***** ***** ***** *****
பூஜையறை!
பிளாஸ்டிக் மாவிலைத் தோரணங்கள்
ஸ்டிக்கர் கோலங்கள்
டப்பர் வேர் டப்பாவிலிருந்து
ஊற்றுகிறார்கள்
விளக்குக்கு எண்ணெய்
ஒலிநாடா ஒப்புவிக்கும்
கந்தர் சஷ்டிக் கவசம்
கடவுள் ஏன் கல்லனான்
கேட்டான் கண்ணதாசன்
கடவுள் ஏன் ப்ளாஸ்டிக்கானான்
பார்த்துக்கொண்டிருக்கிறான் பழநிபாரதி
******
பத்திரப்படுத்த
முடியாதென்றாலும்
செடியிலே
விட்டுவரவும் முடியவில்லை
பூக்களை
**நன்றி: பழநிபாரதி
உனக்காக
எப்போதும் வாங்கும்
இரண்டு முடி மல்லிகையை
இன்று
பூக்காரக் கிழவி
விற்காமல் எடுத்துப் போவது
எத்தனைச் சோகமானது!
*
நீ பொரி போட்டுப்
பசியாற்றிய
கோயில் குளத்தின் மீன்கள்
இன்று தண்ணீர் குடித்துத்
தண்ணீர் குடித்து
உன்னைத் தேடிய தவிப்பு
எத்தனை துயரமானது!
*
நீ வராத
வெறுமையில்
பூங்காவின் காவலாளிக்கு
ஒரு புன்னகையைக் கூட
திருப்பித் தராமல்
இன்று நான் வெளியேறுவது
எத்தனை உறுத்தலானது.
***** ***** ***** *****
யாருக்கும் தெரியாதவள்!
உடைந்து கிடந்தன
வளையல் துண்டுகள்!
உதிர்ந்து கிடந்தன
மல்லிகைப் பூக்கள்!
புகைந்து கொண்டிருந்தது
சிகரெட் துண்டு!
கிழிந்து கிடந்தது
ரவிக்கை!
காவல் நிலையத்திற்குப் பின்னால்
ஆணுறைகள்!
கடை வீதியில்
வளையல்
பூ
ரவிக்கை என்று
வந்து போனார்கள்
நிறையப் பெண்கள்
எந்த பெண்ணுக்கும்
தெரியவில்லை
அந்தப் பெண்ணைப் பற்றி.
***** ***** ***** *****
பெயர் தெரியாத கணம் !
பார்க்கக் கிடைத்த
கொஞ்சம் வானத்தில்
எனது தனிமையைப் பகிர்ந்துகொள்ள
வரும் போகும் பறவைகள்!
பெயர் தெர்ந்தவை சில
பலவற்றிற்குத் தெரியாது
எங்கிருந்து
எதுவரைக்குமென
யோசிக்குமுன் கடந்துவிடும்
என்னை அவை
நான் யோசித்துக்கொண்டிருப்பேன்
தடயங்களற்றுப்
பறக்கும் சுகத்தை
வீழ்ந்துவிட்ட நட்சத்திரமாய்
என்னைப்
பார்த்துக் கொண்டிருக்கும் வானம்
***** ***** ***** *****
சாம்பல் பொழுது!
ஊனமான
கோபுரத்தின் இடுக்குகளில்
உற்றுப் பார்க்கின்றன
நசுங்கிய புறாக்கண்கள்!
எங்கும் எதற்கும்
கதவுகள் இல்லை!
யாரும் ஓடித் தப்பிக்க
இயலாமல்
வளர்கிறது
அத்துவானப் பொட்டல்!
மனநோயாளிகளின்
சிரிப்பும் திகைப்பும்
காற்றையும் நெருப்பையும்
தொற்றி
எரிகிறது
வன்முறையிலிருந்து வன்முறை!
எது
எதனுடையதெனத் தெரியாமல்
பாதைகளை மூடுகிறது
சாம்பல்!
***** ***** ***** *****
பொங்கலோ பொங்கல்!
சம்பா செத்த வயலில்
அடர்ந்து கொட்டும் பனியில்
சில்லிடுகிறது நிலம்!
சுழன்று எரியும்
போகியின் நெருப்பில்
உழவர்கள்
கருகும் நாற்றம்!
பிழிந்த கரும்பின்
கழிவுகளில்
எறும்பின் கால்களால்
ஊர்ந்து வருகிறது
தை
பசியில் குழிந்து
எலி வளைகளாகின்றன
விவசாயக் கண்கள்!
அடிமாடுகள் சுமந்து
விரையும் வாகனத்தின்
அடியில் அதிர்கிறது
வயல்களைக் கிழிக்கும் சாலை!
உடைந்து கிடக்கும்
மண்பானையில்
அள்ள முடியாமல்
சிதறிக் கிடக்கின்றான்
என்
சொல்லாரிசிகள்!
***** ***** ***** *****
பூஜையறை!
பிளாஸ்டிக் மாவிலைத் தோரணங்கள்
ஸ்டிக்கர் கோலங்கள்
டப்பர் வேர் டப்பாவிலிருந்து
ஊற்றுகிறார்கள்
விளக்குக்கு எண்ணெய்
ஒலிநாடா ஒப்புவிக்கும்
கந்தர் சஷ்டிக் கவசம்
கடவுள் ஏன் கல்லனான்
கேட்டான் கண்ணதாசன்
கடவுள் ஏன் ப்ளாஸ்டிக்கானான்
பார்த்துக்கொண்டிருக்கிறான் பழநிபாரதி
******
பத்திரப்படுத்த
முடியாதென்றாலும்
செடியிலே
விட்டுவரவும் முடியவில்லை
பூக்களை
**நன்றி: பழநிபாரதி
காதலின் பின் கதவு!
இன்று பிறந்த குழந்தைக்கு!
உனக்காக வைத்திருந்த
முத்தத்தில்
ஃப்ளோரைட் வாசம்!
உனக்காக வைத்திருந்த
முத்தத்தில்
ஃப்ளோரைட் வாசம்!
உனக்காகப் பறித்த பூவில்
டீசல் தூசி!
டீசல் தூசி!
உனக்காக வாங்கிய
வாழ்த்து அட்டையில்
மரத்தின் இரத்தம்!
வாழ்த்து அட்டையில்
மரத்தின் இரத்தம்!
எனது உலகத்திலிருந்து
ஏதுவுமில்லை உனக்கு!
ஏதுவுமில்லை உனக்கு!
காற்றை
அழுக்குபடுத்தாமல் ஓடும்
உனது குட்டிக் கார்!
அழுக்குபடுத்தாமல் ஓடும்
உனது குட்டிக் கார்!
வன்முறை அறியாத
இராணுவ வீரன்!
இராணுவ வீரன்!
சிரிக்கக் கற்றுக்கொடுக்கும்
சீனத் தங்கை!
சீனத் தங்கை!
விபத்துகளைச் சந்திக்காத
விமானம்
ரயில்!
விமானம்
ரயில்!
உனது பொம்மைகளின்
உலகத்திலிருந்து
முடிந்தால் கொடு
எனக்கொரு சிரிப்பை!
******
பிள்ளையார்!
வெறுங்கல்லாய்க் கிடந்த சுதந்திரம்
வடிவம் பெற்றதில் சிதைந்துவிட்டதாய்
அவர் தனித்திருக்கும் மத்தியானங்களில்
அவருக்காக நான் யோசிப்பதுண்டு.
******
காதலின் பின் கதவு!
இசைத் தட்டின் ஞாபகத்தில்
கடிகாரத்தில் படுத்துக் கிடக்கும்
முட்கள் நாம்!
பசி தீர்ந்த நகங்கள் பற்கள்
அபரிமிதமாய் விட்டுச் சென்ற
இறைச்சித் துண்டின் தனிமை
நம் காலம் !
தழுவும் அலைகளின் லயிப்பில்
பேசத் திணறிய நம் பாறைகளின்
உன் பிம்பங்கள்
உருவாக முடியாமல்
உடைந்து நொறுங்கின!
வண்ணத்துப் பூச்சிகள்
மாமிசம் உண்ணும் கனவுகளுக்கு
நீ உன் உறக்கத்தை
விட்டுக் கொடுத்திருக்கிறாய்!
கோபுரத்தில் புறாக்களும்
பிரகாரங்களில் வௌவால்களும்
ஒரே கோயிலில்
எப்படி வாழ்கின்றன என்று
நான் யோசித்துக் கொண்டிருக்கிறேன்!
**நன்றி: பழநிபாரதி
கவிஞர் யுகபாரதியின் திருமண அழைப்பிதழில் ......
தேவதை தேவையில்லை
தெளிந்த நல் வதனம் போதும்
வைர நகையெதற்கு?
வழித்துணையாதல் இன்பம்
படிக்கிற பழக்கமுண்டு
அடிக்கடி திட்ட மாட்டேன்
பாதியாய் இருக்க வேண்டாம்
முழுவதும் நீயே ஆகு!
இம்சைகள் இருக்கும் கொஞ்சம்
இனிமைதான் ஏற்றுக்கொள்க
வருமானம் பரவாயில்லை
வாழ்வதற்கு கைவசம் கவிதைகள்
வாய்க்கப் பெற்றேன்!
காதலில் விழுந்தேனில்லை
எனவே பிறக்கின்ற பிள்ளைக்கான
பெயரையும் நீயே இடலாம்.
சந்தேகம் துளியும் இல்லை
அந்தரங்கம் உனக்கும் உண்டு
சமயத்தில் நிலவு என்பேன்!
சமையலில் உதவி செய்வேன்!
எழுதிடும் பாட்டுக்குள்ளே
எங்கேனும் உன்னை வைப்பேன்!
ஒரே ஒரு கோரிக்கைதான்
உன்னிடம் வைப்பதற்கு..
வேலைக்குக் கிளம்பும்போது
அழுவதைத் தவிர்க்க வேண்டும்!
வெறுங்கையோடு திரும்பி வந்தால்
வெகுளியாய்ச் சிரிக்க வேண்டும்!
-யுகபாரதி
தெளிந்த நல் வதனம் போதும்
வைர நகையெதற்கு?
வழித்துணையாதல் இன்பம்
படிக்கிற பழக்கமுண்டு
அடிக்கடி திட்ட மாட்டேன்
பாதியாய் இருக்க வேண்டாம்
முழுவதும் நீயே ஆகு!
இம்சைகள் இருக்கும் கொஞ்சம்
இனிமைதான் ஏற்றுக்கொள்க
வருமானம் பரவாயில்லை
வாழ்வதற்கு கைவசம் கவிதைகள்
வாய்க்கப் பெற்றேன்!
காதலில் விழுந்தேனில்லை
எனவே பிறக்கின்ற பிள்ளைக்கான
பெயரையும் நீயே இடலாம்.
சந்தேகம் துளியும் இல்லை
அந்தரங்கம் உனக்கும் உண்டு
சமயத்தில் நிலவு என்பேன்!
சமையலில் உதவி செய்வேன்!
எழுதிடும் பாட்டுக்குள்ளே
எங்கேனும் உன்னை வைப்பேன்!
ஒரே ஒரு கோரிக்கைதான்
உன்னிடம் வைப்பதற்கு..
வேலைக்குக் கிளம்பும்போது
அழுவதைத் தவிர்க்க வேண்டும்!
வெறுங்கையோடு திரும்பி வந்தால்
வெகுளியாய்ச் சிரிக்க வேண்டும்!
-யுகபாரதி
Monday, May 4, 2009
Wednesday, January 28, 2009
காலங்களில் அவள் வசந்தம்!!!
காலங்களில் அவள் வசந்தம்
கலைகளிலே அவள் ஓவியம்
மாதங்களில் அவள் மார்கழி
மலர்களிலே அவள் மல்லிகை
பறவைகளில் அவள் மணிப்புறா
பாடல்களில் அவள் தாலாட்டு
கனிகளிலே அவள் மாங்கனி
காற்றினிலே அவள் தென்றல்
பால்போல் சிரிப்பதில் பிள்ளை - அவள்
பனிபோல் அணைப்பதில் கன்னி
கண்போல் வளர்ப்பதில் அன்னை - அவள்
கவிஞனாக்கினாள் என்னை!!!!
**நன்றி: கவியரசு கண்ணதாசன்
கலைகளிலே அவள் ஓவியம்
மாதங்களில் அவள் மார்கழி
மலர்களிலே அவள் மல்லிகை
பறவைகளில் அவள் மணிப்புறா
பாடல்களில் அவள் தாலாட்டு
கனிகளிலே அவள் மாங்கனி
காற்றினிலே அவள் தென்றல்
பால்போல் சிரிப்பதில் பிள்ளை - அவள்
பனிபோல் அணைப்பதில் கன்னி
கண்போல் வளர்ப்பதில் அன்னை - அவள்
கவிஞனாக்கினாள் என்னை!!!!
**நன்றி: கவியரசு கண்ணதாசன்
Friday, February 1, 2008
Monday, July 9, 2007
'அ'னா 'ஆ'வன்னா..
மதுரை ஸ்ரீமுனியான்டி விலாஸ்(ஒரிஜினல்)
எட்டாம் வகுப்பில்
அறிவியல் எடுத்த
கே.எஸ்.கே வாத்தியார்
எங்களை முன்வைத்து
தமிழ்ப் பேரகராதிக்கு
இரண்டு பெயர்ச் சொற்களை
தானமாக கொடுத்திருந்தார்.
சாதுவான பையன்களென்றால்
'ஆரிய பவன்.'
சட்டாம்பிள்ளைகளுக்கு
'முனியான்டி விலாஸ்.'
காலத்தின் சதுரங்க பலகையில்
முனியான்டி விலாஸும் நானும்
ஆடும் ஆட்டத்தில்
இரண்டே இரண்டு
நேர் எதிர்ப் புள்ளிகளில்
எப்போதும்
சந்தித்துக் கொள்வோம்.
திசையைத் தொலைத்த
திசையிலிருந்து
சதுரமான தட்டுடன்
எதிர்ப்படும் சர்வர்கள்.
அந்தப் பெருந்தட்டில்
வட்ட வட்டக் குறுந்தட்டுக்கள்
என் இருப்புக்குச் சவால் விடும்.
நண்டு, காடை, கோழி, ஆடு,
மீன், எறா, சுறா,
மூளை, குடல், ஈரல்
எல்லாவற்றையும் விலை கேட்டுவிட்டு
தட்டுக்கு தகுதியற்ற
'சிங்கிள் ஆம்லெட்' என்பேன்.
புறக்கணிப்பின் பெரும் வலியை
எனக்களித்து
உள்ளே செல்வார்கள்.
***
கைநிறைய காசுடன்
வேண்டியதை வரவழைத்து
சாப்பிட்டுக் கொண்டிருப்பேன்.
என் எதிரில் யாரோ ஒருத்தர்
கசங்கிய சட்டையுடன்
'மீன் குழம்பாவது கிடைக்குமா?'
எனக் கேட்டு
நிறம் மங்கிய
பீட்ரூட் பொறியலையும்,
நீர்த்துப் போன கீரையையும்,
என் குற்றவுணர்ச்சியையும்
கலந்து பிசைந்து கொண்டிருப்பார்.
பெருந்தட்டுக்கள் மறைந்து
விலைப்பட்டியல் அட்டையை
நீட்டும்துரித உணவகங்கள்
பெருகிவிட்ட இன்றும்
முனியான்டி விலாஸ்களுக்கே
மனம் விரும்பிச் செல்கிறது.
உணவின் ருசி
உணவில் இருப்பதில்லை.
புறக்கணிப்பின் கசப்பிலும்
குற்றவுணர்ச்சியின் காரத்திலும்
அது ஒளிந்திருக்கிறது.
**
கை நீட்டினால் தண்ணீர் வரும் குழாய்
கை நீட்டினால் தண்ணீர் வரும் குழாய் என்கிற கவிதையில் ஒரு பெரிய உணவகத்திலிருக்கும் அந்த குழாய் முன் வந்து போகும் பலரை விவரிக்கிறார் - அம்மாவோடு வந்திருக்கும் ஒரு சிறுவன், கணவனோடு வந்திருக்கும் ஒரு புதுப்பெண், மாநாட்டிற்கு லாரியில் வந்து நகரை சுற்றிப் பார்க்கும் விவசாயி என்று பலர் வந்து அந்த குழாய் முன் நின்று விட்டுப் போகிறார்கள். அந்த சிறுவனும் புதுப்பெண்ணும் அந்த நகரின் ஒரு புதுமையை அறிந்த பெருமிதத்தோடு செல்கையில் அந்த விவசாயியை பற்றி மட்டும் இப்படி சொல்கிறார்.
அந்த விவசாயி
மதிய வெயிலில்
மிதந்து செல்லும்
மேகங்களை நோக்கி
கையை நீட்டி நீட்டி
"தண்ணீர் வருமா? " என்று
சோதித்துப் பார்க்கிறார்.
அடர்ந்த புகையைப் போல்
அந்த மேகங்கள்
கலைந்து காணாமல் போகின்றன.
**நன்றி: நா. முத்துக்குமார்.
எட்டாம் வகுப்பில்
அறிவியல் எடுத்த
கே.எஸ்.கே வாத்தியார்
எங்களை முன்வைத்து
தமிழ்ப் பேரகராதிக்கு
இரண்டு பெயர்ச் சொற்களை
தானமாக கொடுத்திருந்தார்.
சாதுவான பையன்களென்றால்
'ஆரிய பவன்.'
சட்டாம்பிள்ளைகளுக்கு
'முனியான்டி விலாஸ்.'
காலத்தின் சதுரங்க பலகையில்
முனியான்டி விலாஸும் நானும்
ஆடும் ஆட்டத்தில்
இரண்டே இரண்டு
நேர் எதிர்ப் புள்ளிகளில்
எப்போதும்
சந்தித்துக் கொள்வோம்.
திசையைத் தொலைத்த
திசையிலிருந்து
சதுரமான தட்டுடன்
எதிர்ப்படும் சர்வர்கள்.
அந்தப் பெருந்தட்டில்
வட்ட வட்டக் குறுந்தட்டுக்கள்
என் இருப்புக்குச் சவால் விடும்.
நண்டு, காடை, கோழி, ஆடு,
மீன், எறா, சுறா,
மூளை, குடல், ஈரல்
எல்லாவற்றையும் விலை கேட்டுவிட்டு
தட்டுக்கு தகுதியற்ற
'சிங்கிள் ஆம்லெட்' என்பேன்.
புறக்கணிப்பின் பெரும் வலியை
எனக்களித்து
உள்ளே செல்வார்கள்.
***
கைநிறைய காசுடன்
வேண்டியதை வரவழைத்து
சாப்பிட்டுக் கொண்டிருப்பேன்.
என் எதிரில் யாரோ ஒருத்தர்
கசங்கிய சட்டையுடன்
'மீன் குழம்பாவது கிடைக்குமா?'
எனக் கேட்டு
நிறம் மங்கிய
பீட்ரூட் பொறியலையும்,
நீர்த்துப் போன கீரையையும்,
என் குற்றவுணர்ச்சியையும்
கலந்து பிசைந்து கொண்டிருப்பார்.
பெருந்தட்டுக்கள் மறைந்து
விலைப்பட்டியல் அட்டையை
நீட்டும்துரித உணவகங்கள்
பெருகிவிட்ட இன்றும்
முனியான்டி விலாஸ்களுக்கே
மனம் விரும்பிச் செல்கிறது.
உணவின் ருசி
உணவில் இருப்பதில்லை.
புறக்கணிப்பின் கசப்பிலும்
குற்றவுணர்ச்சியின் காரத்திலும்
அது ஒளிந்திருக்கிறது.
**
கை நீட்டினால் தண்ணீர் வரும் குழாய்
கை நீட்டினால் தண்ணீர் வரும் குழாய் என்கிற கவிதையில் ஒரு பெரிய உணவகத்திலிருக்கும் அந்த குழாய் முன் வந்து போகும் பலரை விவரிக்கிறார் - அம்மாவோடு வந்திருக்கும் ஒரு சிறுவன், கணவனோடு வந்திருக்கும் ஒரு புதுப்பெண், மாநாட்டிற்கு லாரியில் வந்து நகரை சுற்றிப் பார்க்கும் விவசாயி என்று பலர் வந்து அந்த குழாய் முன் நின்று விட்டுப் போகிறார்கள். அந்த சிறுவனும் புதுப்பெண்ணும் அந்த நகரின் ஒரு புதுமையை அறிந்த பெருமிதத்தோடு செல்கையில் அந்த விவசாயியை பற்றி மட்டும் இப்படி சொல்கிறார்.
அந்த விவசாயி
மதிய வெயிலில்
மிதந்து செல்லும்
மேகங்களை நோக்கி
கையை நீட்டி நீட்டி
"தண்ணீர் வருமா? " என்று
சோதித்துப் பார்க்கிறார்.
அடர்ந்த புகையைப் போல்
அந்த மேகங்கள்
கலைந்து காணாமல் போகின்றன.
**நன்றி: நா. முத்துக்குமார்.
Friday, June 1, 2007
குழந்தைகள் நிறைந்த வீடு..
கருப்பு வெள்ளை புகைப்படம்
சட்டெனக் காணவில்லை
பனியும் காக்கையும்.
*
அடகு வைத்த
கடிகாரத்தை
அடிக்கடி
நினைவுப்படுத்தும்..
மணிக்கட்டில் தழும்பு
*
இறந்த பாட்டியின்
மருந்துக் குப்பியில்
மண்ணெண்ணெய் விளக்கு
ஞாபகங்கள் எரிகின்றன.
*
தோட்டத்தையும்
பின்பொரு பெண்ணையும்
சேர்த்து ஜாபகப்படுத்துகிறது
நூலகப் புத்தகத்தில்
உலர்ந்த செம்பருத்தி.
*
யாரும் தீண்டாமல்
நகரும் தீப்பெட்டி
உள்ளே பொன்வண்டு.
*
எழுந்து நடந்தான் புத்தன்
போதிமரத்தடியிலும்
எறும்புகள் கடிக்கின்றன.
*
இன்று வேண்டாம் நிலா
நாளை வா
ஊட்டுவதற்குச் சோறில்லை.
*
யாரும் கவனிக்காததை
உணர்ந்த சிறுவன்
அழுகையை நிறுத்துகிறான்.
*
எந்த விருந்தாளிக்கும்
கத்தாதே காக்கையே
எங்களுக்கே உணவில்லை.
*
உடம்பெல்லாம்
வளையல்கள்
தென்னை மரம்.
*
சிக்னலுக்குக் காத்திருக்கும்
கூட்ஸ் ரயிலுக்குக் கீழே
பட்டாம் பூச்சிகள் பறக்கின்றன.
*
நாள் தோறும்
இரண்டு முறை
சரியான நேரம் காட்டும்
ஓடாத கடிகாரம்.
*
கிராமத்து நாவிதன் முன்
வரிசையாய் பங்காளிகள்
தாத்தாவுக்குக் காரியம்
**நன்றி: நா. முத்துக்குமார்
சட்டெனக் காணவில்லை
பனியும் காக்கையும்.
*
அடகு வைத்த
கடிகாரத்தை
அடிக்கடி
நினைவுப்படுத்தும்..
மணிக்கட்டில் தழும்பு
*
இறந்த பாட்டியின்
மருந்துக் குப்பியில்
மண்ணெண்ணெய் விளக்கு
ஞாபகங்கள் எரிகின்றன.
*
தோட்டத்தையும்
பின்பொரு பெண்ணையும்
சேர்த்து ஜாபகப்படுத்துகிறது
நூலகப் புத்தகத்தில்
உலர்ந்த செம்பருத்தி.
*
யாரும் தீண்டாமல்
நகரும் தீப்பெட்டி
உள்ளே பொன்வண்டு.
*
எழுந்து நடந்தான் புத்தன்
போதிமரத்தடியிலும்
எறும்புகள் கடிக்கின்றன.
*
இன்று வேண்டாம் நிலா
நாளை வா
ஊட்டுவதற்குச் சோறில்லை.
*
யாரும் கவனிக்காததை
உணர்ந்த சிறுவன்
அழுகையை நிறுத்துகிறான்.
*
எந்த விருந்தாளிக்கும்
கத்தாதே காக்கையே
எங்களுக்கே உணவில்லை.
*
உடம்பெல்லாம்
வளையல்கள்
தென்னை மரம்.
*
சிக்னலுக்குக் காத்திருக்கும்
கூட்ஸ் ரயிலுக்குக் கீழே
பட்டாம் பூச்சிகள் பறக்கின்றன.
*
நாள் தோறும்
இரண்டு முறை
சரியான நேரம் காட்டும்
ஓடாத கடிகாரம்.
*
கிராமத்து நாவிதன் முன்
வரிசையாய் பங்காளிகள்
தாத்தாவுக்குக் காரியம்
**நன்றி: நா. முத்துக்குமார்
அறிவுமதி கவிதைகள..
ஒரு வரி நீ
ஒரு வரி நான்
திருக்குறள்
நாம்!
அன்பே!அன்பே!
*
தாஜ்மஹாலில்
வசிப்பது
மும்தாஜா?
காதலா?
*
மறப்பதென்றால்
அது முடியவில்லை.
நினைப்பதென்றால்
மனம் சலிப்பதில்லை.
*
நல்ல மழை
பூக்காரி வீடெல்லாம்
(கூடை நிறையப்)
பூவாசம்
*
பாதை நெடுக
'அம்மா தாயே!'
எப்படி சாத்தியம்
ஐஸ்கிரீம் தின்றுச்
சிரித்துப் பேசி... ஓ...
*
ஊருக்குத் திரும்ப
ஒரு வாரம் ஆகும்!
அய்யோ!
நின்று கொண்டேயிருப்பாள்
என் குழந்தை பொம்மை!
*
கூலி விவசாயி!
பசி!
எலி வளைக்குள் நெல்!
*
பழித்துக் காட்டாதே குயிலே!
அந்தக் குழந்தையின் தாய்
உயிரோடில்லை
*
மலரும் பூக்களிலிருந்து
"அம்மா!"
"அம்மா!"..
**
மனித உரிமை பேசி
மரண எதிர்ப்புபேசி
நீளும் பிச்சைக் கைகளில்
உதிரும்
வெள்ளைக்காசு
நக்க
தமிழின் அடம்புக்குள்
நுழையும்
சூழ்ச்சி பொறுத்து
அடையாளத்தேடலுக்கு
அலையும்
சில
மிக நல்ல
மிக மிக மிக
நல்ல நல்ல
முற்போக்குகளும்!
**
முருகனைக்
குப்புறக்கிடத்தி
முதுகில்
வேல் செருகி
விளையாடும்
விநாயக
விளையாட்டின்
வேதனை
உணராமல்
எருக்கம் பூ மாலை
கிளாக்காய்
பிரப்பம் பழம்
காகிதக் குடை
விற்கும்
எம்
நந்தனின் சொந்தங்களாய்
அட்லாண்டிக்கின்
வெளியே
புத்தகக்கடைகள்!
அவாள்களின் விற்பனை
அம்பலத்தாடுவான்
போலே
உள்ளே
உள்ளே
மேலே
மேலே
**
பொட்டலச்சோற்றை
பொறுப்பாய் வாங்கி
இலைச்சோற்றை
ஏகடியம்
செய்யும்
வெட்கங் கெட்ட
தன்நிலை
உணரா
தாழ்வு அறிவுகள்
**
புலம்பெயர்ந்து
பிழைக்கப்
பழகி
துரோகக் காசுகள்
உலுக்கப்பழகி
தங்கை மச்சான்
உறவுகளாக
அழைத்துவந்து
அகதிகள் அல்லல்
அறவே மறந்து
உயர்தர மதுவாய்
தாமிரபரணியின்
குருதியை
ஈழக் கடலின்
குருதியைக்
கலந்து குடித்து
கலந்து குடித்து
தொட்டுக்கொள்ள
எடுக்கும்
சேரனின்
மீன் துண்டுகளில்
இருக்கலாம்
கடலில் சிதறிய
எம்கறும்புலித்
தங்கைகள்
தம்பிகளின்
சதைத் துணுக்குகளும்!
**
நன்றி:அறிவுமதி
ஒரு வரி நான்
திருக்குறள்
நாம்!
அன்பே!அன்பே!
*
தாஜ்மஹாலில்
வசிப்பது
மும்தாஜா?
காதலா?
*
மறப்பதென்றால்
அது முடியவில்லை.
நினைப்பதென்றால்
மனம் சலிப்பதில்லை.
*
நல்ல மழை
பூக்காரி வீடெல்லாம்
(கூடை நிறையப்)
பூவாசம்
*
பாதை நெடுக
'அம்மா தாயே!'
எப்படி சாத்தியம்
ஐஸ்கிரீம் தின்றுச்
சிரித்துப் பேசி... ஓ...
*
ஊருக்குத் திரும்ப
ஒரு வாரம் ஆகும்!
அய்யோ!
நின்று கொண்டேயிருப்பாள்
என் குழந்தை பொம்மை!
*
கூலி விவசாயி!
பசி!
எலி வளைக்குள் நெல்!
*
பழித்துக் காட்டாதே குயிலே!
அந்தக் குழந்தையின் தாய்
உயிரோடில்லை
*
மலரும் பூக்களிலிருந்து
"அம்மா!"
"அம்மா!"..
**
மனித உரிமை பேசி
மரண எதிர்ப்புபேசி
நீளும் பிச்சைக் கைகளில்
உதிரும்
வெள்ளைக்காசு
நக்க
தமிழின் அடம்புக்குள்
நுழையும்
சூழ்ச்சி பொறுத்து
அடையாளத்தேடலுக்கு
அலையும்
சில
மிக நல்ல
மிக மிக மிக
நல்ல நல்ல
முற்போக்குகளும்!
**
முருகனைக்
குப்புறக்கிடத்தி
முதுகில்
வேல் செருகி
விளையாடும்
விநாயக
விளையாட்டின்
வேதனை
உணராமல்
எருக்கம் பூ மாலை
கிளாக்காய்
பிரப்பம் பழம்
காகிதக் குடை
விற்கும்
எம்
நந்தனின் சொந்தங்களாய்
அட்லாண்டிக்கின்
வெளியே
புத்தகக்கடைகள்!
அவாள்களின் விற்பனை
அம்பலத்தாடுவான்
போலே
உள்ளே
உள்ளே
மேலே
மேலே
**
பொட்டலச்சோற்றை
பொறுப்பாய் வாங்கி
இலைச்சோற்றை
ஏகடியம்
செய்யும்
வெட்கங் கெட்ட
தன்நிலை
உணரா
தாழ்வு அறிவுகள்
**
புலம்பெயர்ந்து
பிழைக்கப்
பழகி
துரோகக் காசுகள்
உலுக்கப்பழகி
தங்கை மச்சான்
உறவுகளாக
அழைத்துவந்து
அகதிகள் அல்லல்
அறவே மறந்து
உயர்தர மதுவாய்
தாமிரபரணியின்
குருதியை
ஈழக் கடலின்
குருதியைக்
கலந்து குடித்து
கலந்து குடித்து
தொட்டுக்கொள்ள
எடுக்கும்
சேரனின்
மீன் துண்டுகளில்
இருக்கலாம்
கடலில் சிதறிய
எம்கறும்புலித்
தங்கைகள்
தம்பிகளின்
சதைத் துணுக்குகளும்!
**
நன்றி:அறிவுமதி
சுவடுகள்..
அந்த இரயிலில்
நான் ஏறும் போதெல்லாம்
பார்க்கிறேன்
இறங்கிப்போகும் அவளை!
*
அச்சமில்லை.. அச்சமில்லை
ஞாபகத்தில்.. தேனருவி
உச்சரிக்க முடியாத உன் முகம்!
*
பந்தலடி அம்மியில்
மல்லிகைப் பூக்கள்
இன்னும் வராத அவள்!
*
காலதாமதமாகவே வரட்டும்
காத்திருப்பாள்.. உண்மைதான்
தண்டவாளத்தில் நத்தை.
*
கோபத்தை வாழ்த்தினேன்
மூன்று நாட்களாய்ப் பார்க்காத
உன் சோர்ந்த முகம்.
*
மனம் நிறைய ஞாபகங்கள்
பிறகு ஜன்னல் திறப்பேன்
போய் வா..
வானவில்!
*
உன்னிடமிருந்து கடிதம் வருமா!
என் காலண்டர் முழுக்க
ஞாயிற்றுக்கிழமைகள்!
*
தனித்த அறையில் நான்.
நீயோ திமிர்பிடித்த
வாலிபமும் வெளிச்சமாய்..
சில கவிதைகள்!
*
கண்ணாடியைச் கொத்தும்
சந்தேகச் சிட்டு.
அவளுக்கும் சில அலகுகள்!
*
எங்கள் காதலின்
எலும்புகள் மட்டும்
அவள் போன தண்டவாளங்கள்..
**நன்றி:அறிவுமதி
நான் ஏறும் போதெல்லாம்
பார்க்கிறேன்
இறங்கிப்போகும் அவளை!
*
அச்சமில்லை.. அச்சமில்லை
ஞாபகத்தில்.. தேனருவி
உச்சரிக்க முடியாத உன் முகம்!
*
பந்தலடி அம்மியில்
மல்லிகைப் பூக்கள்
இன்னும் வராத அவள்!
*
காலதாமதமாகவே வரட்டும்
காத்திருப்பாள்.. உண்மைதான்
தண்டவாளத்தில் நத்தை.
*
கோபத்தை வாழ்த்தினேன்
மூன்று நாட்களாய்ப் பார்க்காத
உன் சோர்ந்த முகம்.
*
மனம் நிறைய ஞாபகங்கள்
பிறகு ஜன்னல் திறப்பேன்
போய் வா..
வானவில்!
*
உன்னிடமிருந்து கடிதம் வருமா!
என் காலண்டர் முழுக்க
ஞாயிற்றுக்கிழமைகள்!
*
தனித்த அறையில் நான்.
நீயோ திமிர்பிடித்த
வாலிபமும் வெளிச்சமாய்..
சில கவிதைகள்!
*
கண்ணாடியைச் கொத்தும்
சந்தேகச் சிட்டு.
அவளுக்கும் சில அலகுகள்!
*
எங்கள் காதலின்
எலும்புகள் மட்டும்
அவள் போன தண்டவாளங்கள்..
**நன்றி:அறிவுமதி
அணுத்திமிர் அடக்கு..
கொடிமரம்
ஒடி!
சிறைகள்
இடி!
இராணுவம்
அழி!
அரசுகள் அற்ற
அரசினைச் செய்!
கனவைச்
சுருட்டு!
வானத்தைத்
தின்னு!
கிரகங்களைக்
கொறி!
காற்றைக்
குடி!
புனிதம்
விரட்டு!
தீது
செயற்கை!
எவரையும்
வியக்காதே!
மதி!! மதி!! மதி!!
காத்திருக்காதே!
கற்பு
உடலுக்கு!
காதல்
உயிருக்கு!
காதலி..
*
அர்த்தம்
இல்லை
சொல்லில்!
அர்த்தம்
இல்லை
யாப்பில்!
அர்த்தம்
இல்லை
இல்லை
கவிதையிலும்!
கண்டு
தெளி
கொச்சையுள்!
**நன்றி:அறிவுமதி
ஒடி!
சிறைகள்
இடி!
இராணுவம்
அழி!
அரசுகள் அற்ற
அரசினைச் செய்!
கனவைச்
சுருட்டு!
வானத்தைத்
தின்னு!
கிரகங்களைக்
கொறி!
காற்றைக்
குடி!
புனிதம்
விரட்டு!
தீது
செயற்கை!
எவரையும்
வியக்காதே!
மதி!! மதி!! மதி!!
காத்திருக்காதே!
கற்பு
உடலுக்கு!
காதல்
உயிருக்கு!
காதலி..
*
அர்த்தம்
இல்லை
சொல்லில்!
அர்த்தம்
இல்லை
யாப்பில்!
அர்த்தம்
இல்லை
இல்லை
கவிதையிலும்!
கண்டு
தெளி
கொச்சையுள்!
**நன்றி:அறிவுமதி
Subscribe to:
Posts (Atom)