விதியின் விளையாட்டில்
சில்லுகளாய்
சிதறிக்கிடந்த என்னைச்
சிறுக சேர்த்து சிற்பமாக்கிய
சிற்பி..
விழியிருந்தும்
வாழ்வின்வழியறியாமல்
விக்கித்து இருந்தவனை
விரல் கொடுத்தழைத்துச் செல்லும்,
என் வாழ்வின்
வழிக்காட்டி..
தோல்விகளில்
துவண்டிருந்த்த எனக்கு
சாய்ந்து அழ தோளும்
நிமிர்ந்து எழ தோழமையுமளித்த
உன்னத தோழி..
கோபத்தை கொண்டு மட்டுமே
காரியம் சாதிக்கமுடியும்
என்றெண்ணியிருந்த எனக்கு
அன்பினால் முடியாததேதுமில்லை
என்று அன்பினாலேயே
எனக்குணர்த்திய
என் தேவதை..
உன்னை நேசிக்க
ஆரம்பித்த பின்புதான்
என்னையே நான் நேசிக்கக்
கற்றுக்கொண்டேனடி!!
என்னையே எனக்குணர்த்திய
குட்டி பிசாசு..
சிணுங்கும்பொழுதும்
சிரிக்கும்பொழுதும்
உள்ளம் கொள்ளை கொள்ளும்
சிறுமியாகிறாய்..
கொஞ்சும் பொழுது
குழந்தையாகிறாய்..
பொய் கோபம் கொள்ளும் பொழுதும்
மெய் கோபத்தில் பேசினாலும்,
என் தவறுகளை மென்மையாக
சுட்டும் பொழுதும்
உற்றத்துணை நீதான் எனக்கென
உணர்த்திடும் செல்ல ராட்சஷி..
என்னவளே...
உடல் மறந்து பறக்கும்
உயிர் போலல்லாது..என்றென்றும்
உன்பின்னும் முன்னும்
அருகிலுமாய்
உடன்சுழலும் நிழலாய்
வர வரம் தருவாயா???
Showing posts with label எனது கிறுக்கல்கள்.... Show all posts
Showing posts with label எனது கிறுக்கல்கள்.... Show all posts
Monday, December 22, 2008
Friday, March 30, 2007
மௌனமானவளே..
உன் வார்த்தைகள்
வதைக்கவில்லையடி
என்னை..
ஆனால் ஆளைக் கொல்லுதடி
உன் மௌனம்..
கொன்றாலும்
மீண்டும் மீண்டும்
உயிர்த்தெழுவேன்
ஃபீனிக்ஸ் பறவையாய்...
**
வதைக்கவில்லையடி
என்னை..
ஆனால் ஆளைக் கொல்லுதடி
உன் மௌனம்..
கொன்றாலும்
மீண்டும் மீண்டும்
உயிர்த்தெழுவேன்
ஃபீனிக்ஸ் பறவையாய்...
**
Thursday, March 29, 2007
புயலானவள்...
நான் புயலை ரசிப்பவன்..
ஊடலினூடே வரும்
என்னவளின்
சுவாசம்தானே எனக்குப் புயல் !?
ரசிக்கவே அவளை
ஊடலாய் சீண்டுபவன் நான்..
நான் தென்றலையும் ரசிப்பவன்..
என்னவளின்
சந்தோஷ சுவாசம்தான் அது !?
அதை ரசிக்க
ஊடலில்
தோற்பவனும் நானே...
என்னவளை
தென்றலாய்
நேசிக்கப் பலருண்டு
பாசத்திலும் நட்பிலும்..
புயலாயினும்
அவளை நேசிப்பது
நான் மட்டுமே
காதலில்..
தென்றலானவள் புயலாக
காரணமாயிரம்..
அப்புயலை
தென்றலாய் வீழ்த்தும்
காதலாயிரம்
புரியும் உரிமை
எனக்கு மட்டுமே...
என்னால்
காதலிக்கப்பட்டு
தென்றலாய் வீழவே
புயலாவாள் என்னவள்..
ஊடலினூடே வரும்
என்னவளின்
சுவாசம்தானே எனக்குப் புயல் !?
ரசிக்கவே அவளை
ஊடலாய் சீண்டுபவன் நான்..
நான் தென்றலையும் ரசிப்பவன்..
என்னவளின்
சந்தோஷ சுவாசம்தான் அது !?
அதை ரசிக்க
ஊடலில்
தோற்பவனும் நானே...
என்னவளை
தென்றலாய்
நேசிக்கப் பலருண்டு
பாசத்திலும் நட்பிலும்..
புயலாயினும்
அவளை நேசிப்பது
நான் மட்டுமே
காதலில்..
தென்றலானவள் புயலாக
காரணமாயிரம்..
அப்புயலை
தென்றலாய் வீழ்த்தும்
காதலாயிரம்
புரியும் உரிமை
எனக்கு மட்டுமே...
என்னால்
காதலிக்கப்பட்டு
தென்றலாய் வீழவே
புயலாவாள் என்னவள்..
Subscribe to:
Posts (Atom)