Thursday, April 26, 2007

என்னைத் தெரியுமா?

கைவிளக்கில்
விழுந்த நிழல்
விதிமழையில்
கலைந்த
ஓவியம்
என்னைத்
தெரியுமா ?

இரவினுள்ளே
ஒளிந்த இருட்டு
இல்லை
என்னும் சொல்லினுள்
இல்லாத அர்த்தம்
என்னைத்
தெரியுமா ?

தேவைகளைத் தேடிய
தேவையற்ற பயணம்
துயரத்தின் கண்களில்
துளிர்விடும் கண்ணீர்
என்னைத்
தெரியுமா ?

வேதனைகளில்
வீசும் வாசம்
சோதனைகளின்
சுவாசக் காற்று
என்னைத்
தெரியுமா ?

சூறாவளியின்
பிறப்பிடம்
வெள்ளக்காட்டின்
இருப்பிடம்
என்னைத்
தெரியுமா ?

ஓடும் நதியினில்
விழுந்த சருகு
கடலலையில்
அமர்ந்த மழைத்துளி
என்னைத்
தெரியுமா?

என்னைத் தேடியே
என்னைத் தொலைத்தவன்
எண்ணக் கவிதைகளில்
என்றும் வாழ்பவன்
என்னைத் தெரியுமா ?
** நன்றி: maraththadi.com

Friday, April 20, 2007

காதல் படிக்கட்டுகள்

என் பேனாவிலும்
மை உண்டு
நான் வாழ்ந்து
கொண்டிருக்கிறேன்…
நீ இன்னும்
எழுதிக் கொண்டிருக்கிறாய்.
*
காதல்
கொடுப்பதன்று.
எடுப்பதன்று.
ஈர்த்துக் கவிழ்ப்பதன்று.
மடக்குதல் அன்று.
மடங்குதல் அன்று.
எதிர்பார்த்த வெறியில்… எதிர்பாராத சொடுக்கில் கிடத்துதல் அன்று.
இரக்கத்தில் கசிந்து இருளில் தேங்குதல் அன்று.

தேடல்கள்…
தம் காத்திருத்தலின் தற்செயல் நிமிடத்தில் திகைத்துச் சந்தித்து…
உள்திரும்பித் திருப்தியுறுவது.
இரு ஞாபகங்கள் விரும்பி, ஒற்றை மறதிக்குள் அமிழ்வது.
அதை அறிய மனசு பூத்திருக்க வேண்டும்.
*
நிலா… மொட்டின் மீது வழிந்து விடுகிறது.
பூதான் விந்துவாய் வாங்கிக் கொள்கிறது.
காதலை வாங்கிக் கொள்ள எத்தனை பேருக்கு வாய்க்கிறது?
காதலால் வாழ்ந்துகொள்ள எத்தனை பேருக்கு நேர்மை இருக்கிறது?
அது ஆணுக்கும் பெண்ணுக்குமாக நிகழ்வதா?
ஆணுக்குள் இருக்கிற பெண்ணுக்கும்
பெண்ணுக்குள் இருக்கிற ஆணுக்குமாக…
எதிரெதிர் கண்ணாடிக்குள் நீளும் தொடர் பதிவுகளாய் நிகழ்வது.
*
அஃறிணையில் உயிரோட்டமாக இருக்கிற அது…
உயர்திணையில் வெறும் உடலோட்டமாகி விடுகிறது.
கற்பிதங்களுக்குக் கட்டுப்பட்டு வாழ்கிற சமூக விலங்குகளுக்குக் கூண்டின் கூரைதானே வானம்!
வானமற்றுப் போன வாழ்வில் சிறகுகளின் பாடல்கள் ஏது?
*
இந்தப் பிறவியில் சேர முடியாவிட்டால் என்ன…
அடுத்தப் பிறவியில் சேர்ந்து வாழ்வோம் என்பதுவும்…
உடல்களால் இணையாவிட்டால் என்ன…
உயிர்களால் இணைந்து வாழ்வோம் என்பதுவும் ஏமாற்று.
பொய்!
*
அது உடல் கடந்து நடப்பதா?
உடல்களால் நடப்பது.
சம அதிர்வுகளாலான மின்சேர்க்கை அது.
உடல்தொட்டதும் காதலை இழந்துவிடுகிறவர்கள் அதிகம்.
காதலைத் தொட்டு உடலை அடைபவர்கள் குறைவு – மிக மிக குறைவு.
*
ஸ்பரிசமும்…புணர்தலும் காதலின் நெருங்கிய மொழிகள்.
அவற்றைப் பேசாதே எனச் சொல்லும் தத்துவங்கள் யாவும் பொய் பேசும்.
*
வாழ்வின் வழிகள் முறித்துக் குளிர்காய்கிற எந்தச் சடங்கும் காதலைச் சிதைக்கும்.
பொருந்த நெருங்கும் முழுமைக்குள் சந்தேகங்கள் திணித்துச் சிரமம் செய்யும்.
அதனால்தான்…
அடிமைச் சமூக அமைப்பில் வரலாற்று வழிநெடுக வாழ்ந்து பழகிவிட்ட நமக்கு, வாழ்க்கை மட்டுமல்லாது காதலும் போராட்டமாகிவிட்டது.
*
அடுத்தவர்களிடமிருக்கிற நம்மை மீட்பதும்…
நமக்குள் இருக்கிற அடுத்தவர்களை வெளியேற்றுவதுமான சிக்கல்கள் நிறைந்த போராட்டமிது!
இத்தகைய நெருடல்கள் நிறைந்த வாழ்வில்…
காதலைச் சந்தித்ததாக யாரேனும் கூறினால் நம்ப மாட்டேன்!
காதலிகளைச் சந்தித்திருக்கலாம்.
காதலன்களைச் சந்தித்திருக்கலாம்.
காதலை மட்டும் சந்தித்திருக்கவே முடியாது!
*
சூழ்ந்தார் துயரங்களை வீழ்த்தி எழாத எவருக்குள்ளும் காதல் எழாது – எழ முடியாது.
காதலைப் போல ஒன்று எழலாம்.
அதுவே காதல் ஆகாது.
காதலென்பது என்ன…
இழந்துவிட்டு வருந்துவதா?
பிரிந்துகொண்டு அழுவதா?
இல்லை…இல்லை..
*
'காதல்… காதல்… காதல்…
காதல் போயின்
சாதல்… சாதல்… சாதல்…'
சொன்ன பாரதியின் காதல் என்ன ஆனது?
அவனது தொகுப்பில் பதினாறு விருத்தங்கள் ஆனது.
ஆனாலும் சொல்கிறேன்…
அவனது பிள்ளைக் காதல்தான் அவனைப் பிரபஞ்ச காதலனாக்கியது.
ந்தத் தனிமனிதனை அதுதான் சமூக மனிதனாக்கியது.
அதுதான் அவனிலிருஎந்து எழுந்து இன்னும் நித்திய நெருப்பாக நின்று எரிகிறது.
அவனது போராட்ட உணர்வுக்குள்
ஒன்பது வயதுச் சிறுமி ஒருத்தி ஊடுருவியிருக்கிறாள்
என்கிற உண்மையை உணர்ந்தவர்களுக்குத் தான் தெரியும் – காதலின் பெருமை!
*
என்னை
எல்லோருக்கும்
பிடித்திருக்கிறது.
அவனையும்
எல்லோருக்கும்
பிடித்திருக்கிறது.
எங்களைத்தான்
யாருக்குமே
பிடிக்கவில்லை.
*
மற்றபடி இங்கே காதல் கடிதங்கள் எழுதிக் கொள்பவர்களையும்…
பரிசுப் பொருட்களை மற்றிக் கொள்பவர்களையும்..
எச்சில் இனிப்புகளை ருசிபார்ப்பவர்களையுமா காதலர்கள் என்கிறீர்கள்?
*
ஸ்கூட்டரில் அணைத்துப் போவதையும்…
திரையரங்குகளில் உரசிப் படம் பார்ப்பதையும்…
கடற்கரை இருளில் மடியில் படுத்துக் கிடப்பதையும்
காதல்
என்று நம்பச் சொல்கிறீர்கள்?
*
காதலின் எல்லை
திருமணம் இல்லை
என்பதை
உணர்ந்து கொள்ளவும்
உரத்துச் சொல்லவும்
இங்கே எத்தனை பேருக்குத்
தெம்பு இருக்கிறது?
*
தம் காதலை வெற்றி கொள்ளவும்
தம் பிள்ளைகளின் காதலுக்கு வரவேற்புச் சொல்லவும்
இங்கே எத்தனை பேருக்குப் பக்குவம் இருக்கிறது?
அதற்குக் காரணம் அவர்களல்ல;
நீங்களுமல்ல.
நானுமல்ல.
*
குற்றமற்ற விலங்குகளை நமக்குள் நாமே வளர்த்துப் பழக நாட்கள் இன்னும் நமக்கு அமையவில்லை.
நமது மனம் என்பது தொலைதூரத் தலைமுறைகளைத் தாண்டிய வேட்டைக் கால வாழ்வியற் கருத்துருவாக்கங்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது.
கற்பிக்கப்பட்ட மனோபாவங்களுக்குள் வாழப்பழகிவிட்டதனாலேயேயே, காதல் செய்தலும் மிகப்பெரிய சமூக குற்றமென நமக்குள்ளாகவே ஒருவன் எழுந்து நம்மை எச்சரிக்கிறான்.
*
காதல் குற்றமா?
சமூக குற்றமா?
நமக்குள் இருக்கிற புற மிருகங்களையும்
அக மிருகங்களையும் உசுப்பிவிட்டு
கடித்துக் குதறச்சொல்லி ரத்தம் ரசிப்பவனே அப்படிச் சொல்வான்.

சமூகச் சூழல்களின் சிலந்தி இழைகளிலிருந்து விடுபட்டு…
வாழ்வின் இயல்புத் தளத்தில் இயற்கையின் இயக்கமாகிவிடச் சம்மதிக்கிற எவனும், அதனை அப்படி சொல்ல சம்மதிக்க மாட்டான்!
*
நாம் பிளந்து கிடக்கும் பிரபஞ்ச பிசிறுகள்.
காதலில் இணைகிற ஆணும் பெண்ணும் பிரபஞ்ச இயக்கத்தின் ஆணி வேருக்குள் நெகிழ்ந்து இறங்குகிறார்கள்.
அது இருவரின் முழுமையடைதல் இல்லை.
முழுமைக்கான அடுக்குகளின் ஒழுங்கமைவில் அது ஒரு பகுதி.
*
இருட்டிக் கொண்டு வருகிற ஏதோ ஒரு மழைக்காலத்தில்…
பாறையின் மீது வந்து ஒரு பெண் படுக்கிறாள் என்பது…
அந்தப் பாறையிலிருந்து என்றோ தெறித்துச் சிதறிய ஒரு பகுதி மீண்டும் வந்து அதே இடத்தில் பொருந்துவதாக அர்த்தம்.
அந்தப் பெண்மீது அவளது அந்தக் கணத்தின் முழுச்சம்மதத்தில்…
அவளது ஆண் கவிழ்ந்து இயங்கப் போகிறான் என்கிறபோது அவர்கள் மட்டுமல்ல…
அவர்களைச் சுமந்துள்ள பாறையும் சூழ்ந்துள்ள செடிகளூம்…
செடிகளில் அமர்ந்துள்ள வண்ணத்துப் பூச்சிகளும் கூட அவர்களோடு சேர்ந்து இயங்கப் போகின்றன என்று அர்த்தம்.
*
காதலின் மையத்தில் குனிந்து முகம் பார்க்கிற எவரும் உலகச் சுழற்சியின் ஏதோ ஓர் ஒழுங்கின்மையைச் சரிசெய்கிறவர்களாகவே இருப்பார்கள்.
*
மேல் இமைகளில்
நீ இருக்கிறாய்.
கீழ் இமைகளில்
நான் இருக்கிறேன்.
இந்தக் கண்கள்
கொஞ்சம்
உறங்கி விட்டாலென்ன?
*
வாழ்வின் இடையில் வந்து இடையில் போய்விடுகிற தற்காலிக அதிர்வு அல்ல அது.
ஆயுளைக் கடந்தும் உடல்மாறிக்கொள்கிற நிரந்தர அதிர்வு.
காமத்துக்கான முன் ஒத்திகையாக அதனைக் கருதுகிறவர்களூக்கே அது தற்காலிகம்.
உடல்களால் காமம் பேசிமுடித்த திருப்தியில் உயிர்களால் காதல் பேச முடிகிறவர்களூக்கு மட்டுமே அது நிரந்தரம்.
அப்படிப் பேசிப் பழகப் பயிற்சி வேண்டும்.
வரும் எவருக்கும் நன்றி சொல்ல நினைக்காத தருணங்களால் பேச வேண்டும், அதனை.

உதடுகளின் மெல்லிய அதிர்வுகள் சாட்சியாக…
ஈரத்தில் நனைந்த விழிகள் சாட்சியாக…
அக்குளில் பூக்கும் வியர்வையின் வாசம் சாட்சியாக…
ஏன் கூச்சங்கழிந்த நிர்வாணம் சாட்சியாக…
இழையும் பெருமூச்சுக்களால் பேச வேண்டும் அதனை.
*
பேசப் பேசப் பேசத் தெவிட்டாத பேச்சு அது.
பேசியிருக்கீர்களா நீங்கள்?
நான் பேசியிருக்கிறேன்.
ஆணாக இருந்தல்ல.
பெண்ணாக இருந்துதான் பேசியிருக்கிறேன்.
என்ன சிரிக்கிறீர்கள்?
பெண்ணாகித்தான் பேசமுடியும். அதனை!
*
பெண்ணாகத் தெரியாத எந்த ஆணுக்கும் காதலின் தரிசனம் வாய்க்குமென்று நான் நம்பவில்லை.
ஆயிரம் பெண்களுக்குரிய தாய்மையைத் தன் இதயத்துக்குள் ஏற்றுக்கொள்கிற ஆண்தான், ஒரு பெண்ணின் இதயத்துக்குள் இடம்பெறுகிற அருகதையுள்ளவனாகிறான்.
இருவராய் இணைந்து இருக்கையில் கூடத் தனிமையாய் இருக்கிற சுந்தந்திர சுகத்தை ஒரு பெண்ணுக்கு எவன் தருகிறானோ, அவண்தான் ஆண் என்று சொல்லிக் கொள்ளும் தகுதியைப் பெறுகிறான்!
*
அழகியக் கூண்டு செய்து…
அதற்குள் அடக்கி வைத்து…
'இது என் பறவை..
இது எனக்கு…
எனக்கு மட்டுமே'
என்று எந்தப் பெண்ணையும் சொல்ல எந்த ஆணும் வெட்கப் படவேண்டும்.
விரும்பி வந்து ஒரு பறவை எவ்விதம் அமர்ந்ததோ அவ்விதமே விரும்பியவண்ணம் அது பறந்து செல்லுதலுக்கும் சிரமமற்றபடி கிளையாக இருக்கச் சம்மதித்தலே அணுக்கு அழகு.
*
உரிமை கொண்டாடுதல் அன்று உரிமை தருதலே காதல்.
தருதல் என்ற சொல்லுக்குள்ளும் ஓர் ஆதிக்கத்தனம் தெரிகிறதே!
தருவதற்கு ஆண் யார்?
தருதலும் பெறுதலுமற்ற கருனைப் பெருவெளியில் சிறகுச் சிக்கலின்றிப் பறத்தலே காதல்!
முழுவிடுதலையைச் சுவாசித்துப் பூப்பதுதான் காதல்.
எந்தச் சிறைக்குள்ளும் …
எந்த விலங்குக்குள்ளும்…
அடைபட்டு கட்டுப்பட்டு இருக்க சம்மதிக்காது அது.
*
என்னைச் செதுக்கியது பெண்மை.
என்னில் சிற்பமானது காதல்.
எனக்குள் எல்லாமும் அதுதான்.
எல்லாமும் கற்றுத் தந்ததும் அதுதான்!
*
பூவைப் பறித்துவிடாமல் அதன் செடியிலேயே பார்த்து ரசிக்க…
கைகளின் முடிப்பிசிறுகளில் சிக்கி நகரும் எறும்பை நசுக்கிவிடாமல் மெல்ல எடுத்து ஊதிவிட…
அசையும் ஊதுவத்திப் புகையில் இசை கேட்க…
பயணங்களூடே உடைக்கப்படும் பாறைகள் பார்த்து அழ...
இறந்து கிடக்கும் வண்ணத்துப் பூசியை எடுத்துப் போய் அடக்கம் செய்ய…
போக்குவரத்து மிகுந்த சாலையில் கிடந்து நசுங்கும் ஏதோ ஒரு குழந்தையின் ஒற்றைச் செருப்பைத் தவித்து எடுத்து ஓரமாய் வைக்க…
அதுதான்…
ஆம் …
அதுதான் எனக்குக் கற்றுத் தந்தது.
*
காதல் கற்றுத் தரும்.
காதல் எல்லாம் தரும்.
காதலியுங்கள்.
புரிந்துகொள்வதை அதிகம் பேசலாம்.
உணர்ந்து கொள்வதை?
*
அணுஅணுவாய்
வாழ்வதற்கு
முடிவெடுத்துவிட்ட பிறகு
காதல்
சரியான வழிதான்.
*
பின்குறிப்பு:
பல விஷயங்களை ஆணுக்கு என்று சொல்லியிருந்தாலும் அது இரு பாலருக்குமே பொருந்தும் என்பது என் எண்ணம்
**நன்றி:அறிவுமதி..

Thursday, April 19, 2007

வெள்ளிக் கொலுசொலி வீதியில் கேட்டால்..

உன் வெள்ளிக்கொலுசொலி
வீதியில் கேட்டால்
அத்தனை ஜன்னலும் திறக்கும்.

உன் பார்வை
கொஞ்சம்விலகிவிட்டால்
ஆயிரம் கண்கள் துளைக்கும்.

உன் எச்சில் சோற்றை
காகம் தின்றால்
சாபம் பட்டே இறக்கும்.

நீ செதுக்கிப் போட்ட
பென்சில் துகள்கள்
கவிதையை விட
இனிக்கும்.

உன் வீட்டுப் பூனை
இங்கு வந்தால் என்
தட்டுச் சோறு கிடைக்கும்.

ஒட்டுப்பொட்டை
தவறவிட்டாய்
ன் புத்தகம் தேடு
இருக்கும்.

நீ
மருதாணியை
பூசிக்கொண்டால்
மருதாணிச் செடி
சிவக்கும்.

நீ
மொட்டை மாடிக்கு
வந்து நின்றால்
எங்கும்
தலைகள் முளைக்கும்.

நீ
அழகிப் போட்டியில்
கலந்துகொண்டால்
அழகே தோற்றுப் போகும்.

நீ
முடி விலக்கும்
நளினம் கண்டு
மேகம் விலகிப் போகும்.

நீ
சூடிய பூவை
மீண்டும் விற்கும்
பூக்கடைகளில்
கூட்டம்.

நிலவை நீயும்
கேட்டுக்கொண்டால்
நிதமும் பிறையாய்ப்
போகும்.

உன் வீட்டுக்கதவு
திறந்திருந்தால்
வைகுண்ட ஏகாதசி.

உன் முகத்தைக்
கூந்தல் மறைத்ததனால்
பகலில் நடுநிசி!!
**நன்றி:கவிப்பேரரசு வைரமுத்து.

Wednesday, April 18, 2007

இது போதும் எனக்கு..

அதிகாலை ஒலிகள்
ஐந்துமணிப் பறவைகள்
இருட்கதவுதட்டும் சூரியவிரல்
பள்ளியெழுச்சி பாடும்
உன்பாதக்கொலுசு
உன் கண்ணில் விழிக்கும்
என் கண்கள்
இதுபோதும் எனக்கு
**
தண்ணீர் போலொரு வெந்நீர்

சுகந்தம் பரப்பும் துவாலை
குளிப்பறைக்குள் குற்றாலம்
நான் குளிக்க நனையும் நீ
இதுபோதும் எனக்கு
**
வெளியே மழை

வேடிக்கை பார்க்க ஜன்னல்
ஒற்றை நாற்காலி
அதில் நீயும் நானும்
இதுபோதும் எனக்கு
**
குளத்தங்கரை

குளிக்கும் பறவைகள்
சிறகு உலர்த்தத்
தெறிக்கும் துளிகள்
முகம் துடைக்க
உன் முந்தானை
இதுபோதும் எனக்கு
**
நிலா ஒழுகும் இரவு

திசை தொலைத்த காடு
ஒற்றையடிப்பாதை
உன்னோடு பொடிநடை
இதுபோதும் எனக்கு
**
மரங்கள் நடுங்கும் மார்கழி

ரத்தம் உறையும் குளிர்
உஷ்ணம் யாசிக்கும் உடல்
ஒற்றைப் போர்வை
பரஸ்பர வெப்பம்
இதுபோதும் எனக்கு
**
நிலாத் தட்டு

நட்சத்திரச் சோறு
கைகழுவக் கடல்
கைதுடைக்க மேகம்
கனவின் விழிப்பில்
கக்கத்தில் நீ
இதுபோதும் எனக்கு
***
தபோவனக் குடில்

தரைகோதும் மரங்கள்
நொண்டியடிக்கும் தென்றல்
ஆறோடும் ஓசை
வசதிக்கு ஊஞ்சல்
வாசிக்கக் காவியம்
பக்க அடையாளம் வைக்க
உன் கூந்தல் உதிர்க்கும்
ஓரிரு பூ
இதுபோதும் எனக்கு
**
பூப்போன்ற சோறு

பொரிக்காத கீரை
காய்ந்த பழங்கள்
காய்கறிச் சாறு
பரிமாற நீ
பசியாற நாம்
இதுபோதும் எனக்கு
**
மூங்கில் தோட்டம்

மூலிகை வாசம்
பிரம்பு நாற்காலி
பிரபஞ்ச ஞானம்
நிறைந்த மெளனம்
நீ பாடும் கீதம்
இதுபோதும் எனக்கு
**
அதிராத சிரிப்பு

அனிச்சப்பேச்சு
உற்சாகப்பார்வை
உயிர்ப் பாராட்டு
நல்ல கவிதை
மேல்
விழிந்து வழியும்
உன்
ஒரு சொட்டுக் கண்ணீர்
இருந்தால் போதும்

எதுவேண்டும் எனக்கு?
**நன்றி:கவிப்பேரரசு வைரமுத்து.

காலமே என்னைக் காப்பாற்று!

அதிகாலைக்கனவு கலைக்கும்
அலாரத்திடமிருந்தும் -

நித்தம் நித்தம்
ரத்தத்தில் அச்சேறிவரும்
பத்திரிகைச் செய்திகளின்
பயங்கரத்திலிருந்தும் -

தென்னைமரத்தில் அணில்
வேடிக்கைபார்க்கும்
குழந்தை நிமிஷத்தில்
அலறும் தொலைபேசியின்
அபாயத்திலிருந்தும் -

ஒளிமயமான கற்பனை
உதிக்கும் வேளை
தலைமறைவாகித் தொலைக்கும்
பேனாவிலிருந்தும் -

விஞ்ஞானிபோல் புத்திசெதுக்கி
முனிவன்போல் புலனடக்கித்
தும்பிபிடிக்குமொரு
பொற்பொழுதில்
தொழிலைக் கெடுக்கும்
தும்மலிலிருந்தும் -

காலமே
என்னைக்
காப்பாற்று
**
ஒரே ஒரு புத்தகம்
படித்த'அறிவாளி'யிடமிருந்தும் -

சிநேகிக்கும் பெரியவர்களின்
சிகரெட் புகையிலிருந்தும் -

எல்லாரும் கதறியழ
எனக்குமட்டும் கண்ணீர்வராத
இழவு வீட்டிலிருந்தும் -

காலமே
என்னைக்
காப்பாற்று
**
பயணியர்விடுதிக்
கொசுவிடமிருந்தும் -

முத்திரைவிழாத அஞ்சல்தலைகளை
உற்றுக்கிழித்துப் பயன்படுத்தும்
உலோபியிடமிருந்தும் -
கை கழுவ அமர்ந்த
சாப்பாட்டு மேஜையில்
கைகுலுங்க வரும்
கைகளிலிருந்தும்...

நோயுற்ற காலை
தனிமையிலிருந்தும்-

நோய்கள் வந்தபின்
மருந்திடமிருந்தும் -

மருந்து தீர்ந்தபின்
நோயிடமிருந்தும் -
காலமே
என்னைக்
காப்பாற்று
**
எனதுபக்கம் நியாயமிருந்தும்
சாட்சிகள் இல்லாச் சந்தர்ப்பத்திலிருந்தும் -

வருமானம் எல்லாம்
தீரும் வயதில்
வரிபாக்கி கேட்கும் ஆணையிலிருந்தும் -

என்னைப் பகையாய்
எண்ணும் வாசலில்
பரிந்துரைகோரும் பாவத்திலிருந்தும் -

இல்லையென்றொருவன்
தவிக்கும்பொழுதில்
இல்லையென்று நான்
தவிர்ப்பதிலிருந்தும்

காலமே
என்னைக்
காப்பாற்று
**
சக ரயில் பயணியின்
அரட்டையிலிருந்தும்
அரட்டை முடிந்ததும்
குறட்டையிலிருந்தும்

காலமே
என்னைக்
காப்பாற்று
**
தீதும் நன்றும்
பிறர்தர வாரா
என்பது
எனக்கு ஏற்புடைத்தென்பதால்

என்னிடமிருந்தே
என்னிடமிருந்தே

காலமே
என்னைக்
காப்பாற்று
**நன்றி:கவிப்பேரரசு வைரமுத்து.

நம்பிக்கை ஊன்றி நட..

ஏ!
எந்திர மனிதா!
இன்று முதல்

சிரிக்கப் பழகு
கண்ணீர் சுண்டிக்
கடலில் எறி!

எரிமலைக்
குழம்பா?
இரும்பு காய்ச்சு!

பூகம்பமா?

பூச்செடிகளை மாற்றி நடு!

தாடி சோகம்

இரண்டையும்
ஒரே கத்தியால்
மழித்து விடு!
***
பத்திரிகை முதல் பக்கம்

அத்தனையும் ரத்தமா?
தலைப்புச் செய்தியில்

தேசமே காணோமா?
தேநீர் குடி

ஓசோன் கூரையில்
ஓட்டையா?
குடைபிடி


எந்தக் காலத்தில்
பூமி
தலைசுற்றாமல்
சுற்றியது?

பல் முளைக்கையில்
ஈறு வலிக்கும்
மாற்றம் முளைக்கையில்
வாழ்க்கை வலிக்கும்
வலியெடுத்தால் வழிபிறக்கும்
வழிபிறந்தும் வலியிருக்கும்
***
பூமி பொதுச் சொத்து
உன் பங்கு தேடி
உடனே எடு
ஒவ்வொரு மேகத்திலும்
உன் துளி உண்டு
ஒவ்வொரு விடியலிலும்
உன் கிரணம் உண்டு
வானம் போலவே
வாழ்க்கையும் முடிவதில்லை
**
முதற்காதல்
முற்றும் தோல்வியா?
இன்னொரு காதலி
இல்லையா என்ன?
பூமியை நோக்கி
அழிவுக் கோளா?
இன்னொரு கிரகம்
இல்லையா என்ன?
**
சிரி
நம்பிக்கை ஊன்றி
நட
ஆனால் மனிதா
அவசரப்படாதே
மண்ணின் பொறுமைதான்
மலை
கரியின் பொறுமைதான்
வைரம்
தாயின் பொறுமைதான்
நீ
நான்காண்டுப் பொறுமைதானே
பிப்ரவரியின்
ஒருநாள் உயர்வு?
***

எந்திர மனிதா
இன்று முதல்
சிரிக்கப் பழகு
இந்த பூமி
சிரிப்பவர் சொர்க்கம்
அழுபவர் கல்லறை
உன் உதடு
கல்லறையா? சொர்க்கமா?
**நன்றி:கவிப்பேரரசு வைரமுத்து.

தந்தாலே காதல் காதல் இல்லை!!

தருகின்ற பொருளாய் காதல் இல்லை
தந்தாலே காதல் காதல் இல்லை

யாசகமா காதல்?
நான் கேட்கவும்
நீ கொடுக்கவும்.

உன் வெட்கமும்
என் கர்வமும்
பலியாகும்
யாகம் காதல்.

எடுத்தேன்
கொடுத்தேன்
காதலல்ல.

பூவுக்கு வண்டைப்போல
வண்டுக்குப் பூவைப்போல
எடு தேன்
கொடு தேன்
காதல்.

தவத்தில் விளையும்
வரமே காதல்.
தாடிவைத்த
இளைஞரெல்லாம்
தவம் கலைத்த
ஞானிகள்.

தேடலில் விளையும்
தெளிவு காதல்.
உன்னில் என்னையும்
என்னில் உன்னையும்.

உன் பேரைக்கேட்டால்
நான் திரும்பிப் பார்ப்பது
என் பேரைக் கேட்டால்
நீ பூமி பார்ப்பது.

கவிதை தாங்கிய
காகிதமல்ல காதல்
காகிதம் காணா
கவிதைகளே
காதல்.

வேண்டிப் பெறுவதா காதல்?
வேள்வியில் பெறுவது காதல்.
முத்தத் தீயில்
முனகல் மந்திரங்கள்..

தானமல்ல காதல்.
தாகம்.
தீரத் தீரத்
தீரா தாகம்.

காதல்,நிகழ்வல்ல
இருப்பு.
நீ நானாகவும்
நான் நீயாகவும்.

நீ வென்றபோதும்
நானே வெல்கிறேன்.
நீ தோற்றபோதும்
நானே தோற்கிறேன்.
நீ தோற்பதில்லை
நான் வெல்வதில்லை
இதுதான் காதல்.

எனை ஏற்றுக்கொள்
என்பதில்லை காதல்.
உனை ஏற்றுக்கொள்
என்பது காதல்.

நான் நீயாகவும்
நீ நானாகவும்
மாறுவது
கொடுக்கல் வாங்கலா?

பருவகால உருமாற்றம் அது,
மனப்பிணைப்பில் உயிர்மாற்றம் அது.
மரங்கள் இலைகளை உதிர்ப்பதுபோல
என்னை உதிர்க்கிறேன்
மீண்டும்
நீயாய் துளிர்க்கிறேன்.

இது நீ தந்ததா?
நான் ஆனது.
நாம் ஆனது.

தந்தாலே காதல் காதலில்லை.
**நன்றி: கவிஞர் வாலி

Tuesday, April 17, 2007

கல்லெறிதல்..

சாலையைச்
செப்பனிடுவதற்காக
கொட்டப்பட்ட
மணலில்தான்
கோயில் கட்டி
விளையாடுவோம்.

கலசத்திற்கு
பதிலாக
ஒரு கொத்து
காட்டாமினுக்கை
நட்டு வைப்போம்.

நடுவிலொரு
குழி பிரித்து
உருண்டையாய்
களிமண்ணை
பிடித்து
கர்ப்பக் கிரகம்
அமைப்போம்.

காகிதப் பூவால்
அலங்கரித்து
கன்னத்தில்
போட்டுக் கொள்வோம்
சப்புக் கொட்டி.

எதன் பொருட்டாவது
கலைய நேரிடும்
மீண்டும் வந்து
பார்க்க
கலசத்தில்
பட்டிருக்கும்
நீரபிஷேகத்தில்
சற்றே
கரைந்திருக்கும்
அதன் உரு.

சோகத் தூவானமாய்
கண்கள் அரும்பும்.
கோயிலை சிதைத்த
நாயின் மீது
கல்விட்டெறிவர்
ஹமீதும், பீட்டரும்.
**நன்றி: யுகபாரதி

காதலின் பின்கதவு..

கிளைக்கரம் நீட்டி
மரம்
உன்னை அன்போடு
அழைக்கும் போது
உன் அம்மாவை...

ஈரக்காற்றெடுத்து
மரம்
சில்லென்று தழுவும்போது
உன் மனைவியை...

பூக்களைச் சிந்தி
மரம்
உன்னைக் குதூகலப்படுத்தும்போது
உன் குழந்தையை....

எப்போதாவது
உணர்ந்திருக்கிறாயா ?
இப்போது சொல்
உன் தாயை
உன் மனைவியை
உன் குழந்தையை
ஒரே நேரத்தில்
உன்னால்
கொலை செய்ய இயலுமா ?
**நன்றி: பழநிபாரதி

நியூட்டனின் மூன்றாம் விதி!

கிராமந்தோறும் விஞ்ஞானம்
அட்டைக் கத்திகள் பளபளக்க
ஆழிசூழ் உலகை ஆண்டு;
பம்ப்செட் மறைவில்
கள்ளச்சாராயம் குடித்துவிட்டு;
ஊர்போய்ச் சேரும்
ஒரு நாள் ராஜாக்கள்
இப்போது வருவதில்லை.

கட்டியக்காரனுக்கு
பொட்டலம் கட்டி
மாலை போடுவதற்காக
தவளைகள் தேடும் பிள்ளைகள்
தறிக்குழியில் கிடக்கிறார்கள்.

பெண் வேடமிடும் நடிகர்களின்
கொட்டாங்குச்சி மார்பில்
ஊர் பெயர் பராக்கிரமம் சொல்லி
பணத்தாள்கள் குத்தும்
பெரிய வீட்டு பிள்ளைகள்;
டூரிஸ்ட் பஸ்ஸில் வந்திறங்கி
பெருமாள் கோயில் படித்துறையில்
மொட்டைத் தலையுடன்
லஜ்ஜையின்றி குளிக்கும்
தெலுங்குக்காரிகளின்
குறுமுலை பார்க்க
பழகிக் கொண்டுவிட்டார்கள்.

தெருக்கூத்து முடிந்த மைதானமும்
வர்ணங்கள் சிதறிக்கிடக்கும்
ஒப்பனை அறை அதிசயங்களும்
குழந்தைகள் கைக்கெட்டாத
காலத்தில் உறைந்துவிட்டன.

மூங்கில் பத்தைகளின்
சீரியல் லைட்டுகளில்
எங்கள் ஊர் அம்மன்
உருவமாற்றம் அடைந்துவிட்ட
இந்த வருடத் திருவிழாவிற்கு
வீடியோவில்
'படையப்பா' படமாம்!

**நன்றி: நா. முத்துக்குமார்

சிறுகவிதைக் களஞ்சியம்..

பழநிபாரதி
என்னைத் தவிர
யாரிடமும் பேசாதே.
உன் இதழ்களில்
நனைந்து
வருவதால்
வார்த்தைகளெல்லாம்
முத்தங்களாகி
விடுகின்றன.
**
இரவில் ஒளிவிடும்
உன் உடலைப்
பார்க்கும் வரை
தெரியாது எனக்கு
மின்மினிகள்
மின்னுவது
காதலால்தான்
என்பது.
**
உன் காலடியில்
ஊரும் எறும்பை
தயவுசெய்து
நசுக்கிவிடாதே..
அது இழுத்துவரும் இரை
நம் காதலின்
பெயரெழுதிய
அரிசியாக இருக்கலாம்.
**
நீ ஒருமுறைதான்
பார்த்துவிட்டுப் போனாய்
என் வீட்டு ஆளுயரக்
கண்ணாடி
உன் நிழற்படமாகிவிட்டது.
**
இரவும் இரவும்
சந்திக்கும்
இரகசியமான இடம்
உன் கூந்தல்.
அதைவிட
இரகசியமான இடம்
உன் இதயம்.
அதனால்தான்
அங்கே
என்னை நீ
என்ன செய்கிறாய் என்றே
தெரியவில்லை.
**
நீ பருவமகள்
உண்மைதான்.
குளித்து முடித்த உன்
கூந்தலில்
நீர் சொட்டும் போது
மழைக்காலம்.
சீவும்போது
இலையுதிர்காலம்.
நீ பூச்சூடும்போது
வசந்தகாலம்.
அதை அள்ளி
நான் போர்த்திக்
கொள்ளும்போது
குளிர்காலம்.
**
கொடுக்கும் முத்தத்தை
விட
லேசானது
வாங்கும் முத்தம்
ஆனால்...
லேசாக
வாங்கிவிட முடியாது.
**
தண்டவாளத்தில்
தலைசாய்த்துப்
பூத்திருக்கும்
ஒற்றைப் பூ
என் காதல்..
நீ நடந்து வருகிறாயா??
ரயிலில் வருகிறாயா?
**
உடைந்த வளையல்
துண்டுகளையாவது
கொடுத்துவிட்டுப்போ.
கலைடாஸ்கோப்பில்
உன்னைப்
பார்த்துக் கொண்டிருப்பேன்
**
தேவதைகள்
பூமிக்கு வருவதில்லை
என்பதெல்லாம்
காதலிக்காதவர்கள்
சொல்லி வைத்த
பொய்கள்..
**
பா.விஜய்
ரோஸ் ஜஸ் சாப்பிட்டு
வாய் சிவக்க நிற்பாய்!
நிற மாற்ற விதி
என்பது
இயற்பியல் அல்ல
இதழியல்!
**
எண்ணெய் அப்பிய
ரெட்டை ஜடையில் சிக்கி
வழுக்குது
மல்லிகைப் பூவும் என்
மனசும்.

கம்பெனி சைக்கிளில்
போகும் உனை
வாடகை சைக்கிளில்
தொடர்வேன்.
உன்னை சமீபிக்கையில்
அறுந்து போகும்
செயினும் என் தைரியமும்.

பேச முடிவதே
கொஞ்ச நேரம்தான்!
வெட்கத்தை வீட்டிலேயே
வைத்துவிட்டு
வரக்கூடாதா?
**
கொலுசு
உன் கால்களோடு
போய்விட்டது!
சத்தம் மட்டும்
என் காதுகளோடே
வருகிறது!
**
சின்ன வயசில் நிறைய
சிலேட்டு குச்சிகளை
முழுங்குவேனாம்!
இருபது வயதுகளில்
இப்படியெல்லாம்
உன்னைப் பற்றி
எழுதத் தானோ?
**
கபிலன்
யாரோ நம் பெயரை
சுவரில் கிறுக்கியிருந்ததை
ப்படிக்கும் பொழுது
அச்சமாக இருந்தது.
நேற்று அதன்மீது
"காதல்"
திரைப்பட போஸ்டரை
ஒட்டியிருந்ததைப் பார்க்க
மகிழ்வாக இருந்தது.
**
பறக்கத் தெரியும்
திசை தெரியாது..
காதல் ஓர்
இலவம் பஞ்சு.
**

யாரோ சொன்னங்க... பாகம்-4

பிரிந்தவர் கூடும்
பொழுது
வார்த்தை கை விடுமாம்…
சரி விடு!
முத்தம் கை கொடுக்கும்!
***
பார்க்காமல் விட்டுவிட்டேன்
ஒருவேளை நடந்திருக்கலாம்
மனதை வருடும் மழையோ
இல்லைவானில் நட்சத்திரமோ
எதோவொன்று உணர்த்திப்
போயிருக்கலாம்
எனக்கொரு தோழி கிடைக்கப்போவதை
**
வேதனையின் போது
சாரலில் எழும்
மண்வாசனை போல்
இதமாய் இருக்கிறது
உன்
நட்பின் வார்த்தைகள்
**
சந்தோசமாய்
உன் விரல் பிடித்து
சிறுகுழந்தை போல
விளையாடிக்கொண்டே நடக்கிறது
மனது
அருகருகே
நடந்துகொண்டிருக்கிறோம் நாம்!
**

காதலதிகாரம்..

காதல்
ஒரு பப்புள் கம்!
உடைப்பது சுலபம்!
ஊதுவது கடினம்!

காதல்
ஒரு பலூன்!
பெரும்பாலான காதலிகள்
அந்த பலூனுக்குள்
உதடுகளைக் கொண்டு வராமல்
ஊசிகளையே கொண்டு வருகிறார்கள்!

காதல்
ஒரு விநோதமான பரீட்சை அறை!
அது எப்போதும்
தேவதைகளுக்கு பாஸ் மார்க்கையும்
தேவதாஸ்களுக்கு டாஸ் மார்க்கையும் தருகிறது!

காதல்
ஒரு பெருங்கிணறு!
தன்க்குள் விழுந்தவனை
அது மூன்று முறை மேலே அனுப்பி
தப்பிக்கச் சொல்கிறது.
அப்போதும் பிழைக்கத் தெரியாதவன்
மூன்று முடிச்சுப் போட்டு
மூழ்கிப் போகிறான்.

ஆகவே நண்பர்களே
தயவு செய்து காதலிக்காதீர்கள்!

காதல்
நண்பர்களை நாய்க்குட்டியாகவும்
நாய்க்குட்டிகளை நண்பர்களாகவும்
மாற்றி விடுகிறது!
**நன்றி: நா. முத்துக்குமார்

Friday, April 13, 2007

ஆயுளின் அந்திவரை..

தோழி
சந்தைக்குப் போனால்
எனக்காகக்கொஞ்சம்
தூக்கம்வாங்கி
வா
கனவுகள் ஒன்றிரண்டு

கலந்திருந்தால்
வரும்
வழியிலேயே
பொறுக்கிப் போட்டுவிடு..
*
சந்திப்பதற்காக

இனியும்
ஆசை வளர்க்காதே
வா
அவரவர்

இடத்திலிருந்தே
புறப்படுவோம்
எங்கேனும்
முள் தைத்தால்
வலியில் முகம் பார்த்துக்
கொள்ளலாமே
**
நம் கவிதைகளை
வானத்திற்குக்
காண்பித்தேன்
வானவில் கொடுத்து
மழை தூவி
விட்டது

மனிதர்களிடம்
காண்பித்தேன்
கண்களை
மூடிக்கொண்டு
எச்சில் துப்பிவிட்டார்கள்
**
அணுஅணுவாய்
வாழ்வதற்கு
முடிவெடுத்துவிட்ட
பிறகு
காதல்
சரியான வழிதான்.
**
இனி
பார்க்கவேண்டும்
என்கிற ஆசை
வருகிற போதெல்லாம்
அந்த வானத்தைப்
பார்த்துக் கொள்ளலாம்..

எங்காவது
ஓரிரு புள்ளியில்
நம் பார்வைகளாவது
சந்தித்துக் கொள்ளட்டுமே
**நன்றி:அறிவுமதி

கெட்டாலும் மேன்மக்கள்...

இந்த முறையும் அம்மா
ஈசல் வறுத்து அனுப்பியிருக்கிறாள்

பொரி அரிசியுடன் கலந்து
அம்மா வறுக்கும்
ஈசல்களின் ருசி
மதுரை ஸ்ரீமுனியாண்டி விலாஸ் (ஒரிஜினல்)
ஓட்டல்களின்
சமையலறைக்குப் புலப்படாதது

வேட்டைகளில்
விருப்பமுள்ளவன் நான்
காடாவிளக்கும்
கொஞ்சமே கொஞ்சூண்டு
குழந்தை குதூகலமும் போதும்
ஈசல் வேட்டையாட

வறட்டி தட்டுவதற்கு
சாணம் கொட்டிவைத்த
நிலத்தில்
ஈசல் குழிகள் ஏராளமிருக்கும்
கூளத்திற்காய் குவித்த
வைக்கோல் துணுக்குகளில்
முளைவிட்டிருக்கும்
நெல் மணிகளை
மிதிக்காமல் நெருங்கி,
கண்ணாடி ரெக்கைகள்
உள்ளங்கையில் குறுகுறுக்க
கொத்தாகப் பிடிப்போம்

அந்தியில் பறக்கும்
ஈசல்களிடமிருந்து
அடைமழைக்கான
சாத்தியங்கள் தேடும்
வயதைத் தொலைத்து,
நதியில் நடந்த பாதங்கள்
நகரத்திற்கு வந்து
நாளாயிற்று

இப்போதும்
வேட்டையாடிக்
கொண்டுதானிருக்கிறேன்
காகிதத்தில்
எண்ணெய் தோய்த்து
விளக்கிற்கடியில் தொங்கவிட்டு
கொசுக்களை..
**நன்றி: நா. முத்துக்குமார்.

காதல் மாய உலகம்!!

காதல் மாய உலகம்
சிலந்தி வலையில் சிறுத்தை மாட்டும்

வரம்கொடுக்கும் தேவதைகள்
உலாவரும் காடு,
காதலெனும் மாய உலகம்.

அங்குள்ள குரங்குகளும்
அழகானவை.
சிறகுமுளைத்த
சிறுவர்களின் கூட்டமொன்று
எப்போதும் இசையெழுப்பிக்
கொண்டிருக்கும்.

அங்கே,பெண்மயில்கள்
தோகை விரிக்கும்
கவிஞர்கள் வாயடைக்கக்
கற்கள் கவிபாடும்

வானங்கள்
பூமியில் இயங்கும்
நட்சத்திரங்களைப்
பறிக்க இயலும்.

மான்கள் வேட்டையாட
ஆண்கள் மாட்டிக்கொள்வர்.

புத்தகங்களுக்குள்
இறகிருக்காது
பறவையே இருக்கும்.

ஓடுமீன் எல்லாமே
உறுமீன்கள் இங்கே.

நிலவுகள் தேய்வதில்லை!
ஆம்,
காதல் தேசத்தில்
பல்லாயிரம் நிலவுகள்.

வருடங்கள் இல்லை
வயதும் இல்லை.

பால்யவயதுப்
படுக்கை நேரக் கதைகளைப்
பாடமென
நம்பச் செய்யும்
காதல்.

செருப்பில்லாமலே
சிண்ரெல்லாக்களை
கண்டுகொள்ளலாம் அங்கே.
அழகுப் பெண்களின்
அசுர அண்ணன்களும்
அன்பானவர்கள்.

கவிதைகளே இங்கு உரையாடல்
முத்தமே தாய்மொழி.
உதடுகள் ஓய்வெடுக்க
இதயங்கள்
பேசிக்கொள்ளும்.

இங்கே மரங்கள் பூக்கின்றன,
காய்ப்பதில்லை
பசிக்குத்தானே பழங்கள் தேவை.
தேனை ஊற்றி வளர்க்கிறார்கள்
சொலைகளை.
அங்கே 'பூக்களை பறிக்கலாம்',
காதலிக்காக.

முடிவில்லாப் பாதைகளும்
சப்தமில்லா அருவிகளும்
அன்னியரில்லாப் பூங்காக்களும்
அழகானப் பேய்களும்,
அலையில்லாக் கடல்களும்
பேச்சில்லா பாஷைகளும்
இருளில்லா இரவுகளும்
விடியாத நாட்களும்
வேண்டும்போது மழையும்
வேண்டாமலே வரமும்
எப்போதும் தென்றலும்
எத்திக்கும் இன்பமும்
நிறைந்திருக்கும்
காதல்
மாய உலகம்...
**நன்றி: நா. முத்துக்குமார்

எனது கறுப்புப் பெட்டி!

ரயில் பயணங்களின் போது...
வீட்டு ஜன்னல்களின் வழியே
கையசைக்கும் குழந்தைகளுக்கு
பதில் கையசைக்கும்
கைகள் எனக்கில்லை
**
திட்டமிட்டு யாரையும்
ஏமாற்றுகிற துணிவு
என்னகில்லையென்றாலும்
ஏதாவது உணவகத்திலோ
மருந்தகத்திலோ
கொடுத்த பணத்தை
விட அதிகமாக தந்தால்
பேசாமல் வாங்கி வருபவனில்
நானும் ஒருவனே..
**
எப்படியேனும்
எல்லோரிடமிருந்தும் தப்பித்து
வீடு வந்து
கண்மூடினால்
என்னிடம்
மாட்டிக் கொள்கிறேன்..
**
நாள் முழுவதும்
கூந்தலிலிருந்த பூவை
எந்தச் சலனமுமின்றி
எடுத்தெரிந்துவிட்டு
வேறு பூவைச்
சூடிக் கொள்ள
எப்படி முடிகிறது
இந்தப் பெண்களால்..
**
அவ்வளவு தொலைவிலிருந்து
குழந்தைகள் சாப்பிட உதவும்
நிலவில்
மனிதன்
உயிர் வாழமுடியாது
என்பதை
எப்படி நம்புவது?
**
'அ'-வுக்கு முந்தி
எழுத்துக்கள் இல்லையெனினும்
'அ'- எழுதப் பழகிய
என் கிறுக்கல்களெல்லாம்
'அ'-வுக்கு முந்திய எழுத்துக்களே!
**
நான்
யாரைப் பார்க்கப் போனாலும்
அவர்
தனிமையில்
இருந்துவிடக்கூடாதே
என்கிற பயம் எனக்கு..
தனிமை
கலைக்கப்படுகிறபோது
ஏற்படும்
இழப்புகளை
நான் அறிவேன்
**நன்றி..தபூ சங்கர்

யாரோ சொன்னங்க... பாகம்-3

நம் எத்தனை மணி
நேர சந்திப்பின் இறுதியிலும்
எதேனும் சில வார்த்தைகள்
திகம் பேசவே விரும்புகிறேன்!
இனிமேல் வரமாட்டேன்
என்றாவது சொல்லிப்போ!
**
அன்று நடந்த
கவிதைப் போட்டிக்கு
எல்லோரும்
கவிதையோடு
வந்திருந்தார்கள்..
ஆனால்
நீ மட்டும்
உன் கண்களோடு
வந்திருந்தாய்!
**
எத்தனைக் கவிதை
எழுதினாலும்
உன் இதயத்தை
என்னால்
திருட முடியவில்லை..
நீயோ
ஒற்றைப் புன்னகையில்
என்னைக்
கைது செய்து
போகிறாய்!
திருடும் முன்னேக்
கைது செய்யும்
கொடுமைக்காரி நீ!
**
உன் இமைகள்
வேகமாகப் படபடக்கக்
காரணம்
பிறர்க்குத் தெரியாமல்
களவாடிய
என் இதயத்துடிப்போடு
நீ விளையாடும்
விளையாட்டென
எப்படிச் சொல்லுவாய்!!
எப்போது சொல்லுவாய்??
**
என்னை காதலிக்கிறாயா?
என்று கேட்க‌
எனக்கு தயக்கம்!

என்னை காதலிகிறீர்களா?
என்று கேட்க
உனக்கு வெட்கம்!

இருவருமே
கேட்டுக்கொண்டோம்!
நாம் காதலிகிறோமா?
**

விழிகள்
நட்சத்திரங்களை வருடினாலும்
விரல்கள் என்னவோ
ஜன்னல் கம்பிகளோடு தான்.
**
உன் நினைவுகளை,
என்னில் சுமந்து,
நான் கடந்த பாதையெல்லாம்,
உன் காலடிச் சுவடுகள்.
**
உனக்கும் எனக்கும்
ஏதோ இதுவாம்
ஊரே பேசிக்கொள்கிறது
நிழலே
இதமாய் இருக்க
நிஜத்திற்காய்
ஏங்குகிறது மனசு
**
அந்த விபத்து
நடந்தவுடன்,
எல்லோரும்
ஒரு வினாடி ஸ்தம்பித்து,
மீண்டும் நகர்ந்தனர்
அன்றிரவு,
அவர்கள்
ஒரு வினாடி தாமதமாய்த்
தூங்கப் போயினர்.
**
ஒன்றரை வருடங்களுக்கு
முன்
நீ எழுதிய
கடைசிக் கடிதத்தின்
கடைசி வரிகள்..
"இனிமேல்
இத்தகைய இடைவெளி
இருக்காது
அடிக்கடி கடிதம் எழுதுவேன்."
**
நான் அப்படியே
நானாகத் தெரிவேன்
நான் நானாகத்
தெரிந்தாலும்
கண்ணாடி மனிதனுக்கு
இல்லை
என்னைப் போல்
நிறைய முகங்கள்
**
உனக்குப் பிடித்ததை
எடுத்துக் கொள்
என்றேன்!

உனக்குப் பிடித்ததை
எடுத்துக் கொடு
என்றாய்!

நமக்குள்
அழகாய் தொடர்கிறது
கண்ணாமூச்சி!!
**

மரவியாபாரி
கோடாலியால் மரம்
வெட்டிக்கொண்டிருந்தான்

அது தவறிப் போய்
ஆற்றில் விழுந்தது.

தேவதையை வேண்டி
கொண்டான்.
தேவதையும் தோன்றினாள்.

தங்க கோடாரியை காட்டினாள்;
இல்லையென்றான்.

வெள்ளிக் கோடாரியை காட்டினாள்;
அதுவும்
இல்லையென்றான்.

இரும்புக் கோடாரியை காட்டினாள்;
ஆமாம் யென்றான்
வியாபாரி.

கோடாரியை தலைக்குயர்த்தி
அவனை வெட்டத்
தொடங்கினாள் தேவதை.

அலறிய படியே கேட்டான்...
அய்யோ.. நீ என்ன தேவதை...

அளுங்காமல் சொன்னாள்
அவள்,
வனதேவதைடா....
வனதேவதை...!
**

நீ விலகியதும்
உன்னிடமிருந்து என்னிடம்
ஓடி வருகிறது
காதல்.
என்னிடமிருந்து உன்னிடம்
ஓடிப் போகிறது
என் இதயம்!
**