Friday, June 1, 2007

சுவடுகள்..

அந்த இரயிலில்
நான் ஏறும் போதெல்லாம்
பார்க்கிறேன்
இறங்கிப்போகும் அவளை!
*
அச்சமில்லை.. அச்சமில்லை
ஞாபகத்தில்.. தேனருவி
உச்சரிக்க முடியாத உன் முகம்!
*
பந்தலடி அம்மியில்
மல்லிகைப் பூக்கள்
இன்னும் வராத அவள்!
*
காலதாமதமாகவே வரட்டும்
காத்திருப்பாள்.. உண்மைதான்
தண்டவாளத்தில் நத்தை.
*
கோபத்தை வாழ்த்தினேன்
மூன்று நாட்களாய்ப் பார்க்காத
உன் சோர்ந்த முகம்.
*
மனம் நிறைய ஞாபகங்கள்
பிறகு ஜன்னல் திறப்பேன்
போய் வா..
வானவில்!
*
உன்னிடமிருந்து கடிதம் வருமா!
என் காலண்டர் முழுக்க
ஞாயிற்றுக்கிழமைகள்!
*
தனித்த அறையில் நான்.
நீயோ திமிர்பிடித்த
வாலிபமும் வெளிச்சமாய்..
சில கவிதைகள்!
*
கண்ணாடியைச் கொத்தும்
சந்தேகச் சிட்டு.
அவளுக்கும் சில அலகுகள்!
*
எங்கள் காதலின்
எலும்புகள் மட்டும்
அவள் போன தண்டவாளங்கள்..
**நன்றி:அறிவுமதி

0 comments: