Thursday, March 29, 2007

நம்பிக்கையுடன்.....

1. நீ அடுத்தவர்
மீது கொண்ட
நம்பிக்கை
என்பது காசோலை!
நீ உன் மீதே
கொண்ட
நம்பிக்கை என்பது
ஏ.டி.எம் அட்டை!
**
2. கைக்குட்டைகள்
கண்டுபிடிக்கப்பட்டது
கண்ணீர் துடைக்க அல்ல!
வேர்வை துடைக்க!
**
3. புறாவின் மனம் கொள்!

கட்டுவது கூடாயினும்
உயரத்திலேயே கட்டும்.
**

4. மரங்குடைய
கோடாலி கொண்டு
போவதில்லை

மரங்கொத்தி!
அவனவன் கையில் ஆயிரம் ஆயுதம்.
**

5. புதுப்பித்துக் கொள்!
பழைய செடிகளில் பார்
புதிய மலர்கள்..
தினசரி...
**

நன்றி:பா.விஜய்

0 comments: