Thursday, March 29, 2007

செய்யும் காதலே தெய்வம்...

'கடமையைச் செய்
பலனை எதிர்பாராதே' - இது
கண்ணபிரான் சொன்னது'
'காதலைச் செய்
பலனை எதிர்பார்' - இது
காதல் பிரான் சொல்வது
**
எந்தப் பூங்காவிலும்
அழகான பூக்கள்
காதலர்களே!
**
வீட்டுக்கு ஒரு மரம்
இதயத்துக்கு ஒரு காதல்!
**
நம் காதலியைப் பார்க்கையில்
நம்மை மறந்து விடுகிறோமே
அதுதான் தியானம்.
**
'ஒரு கன்னத்தில் அடித்தால்
மறு கன்னத்தைக் காட்டு' - இது
இயேசுபிரான் சொன்னது.
'ஒரு கன்னத்தில் முத்தமிட்டால்
மறு க்ன்னத்தைக் காட்டு' - இது
காதல் பிரான் சொல்வது.
**
ஆடை இல்லாத மனிதன்
அரை மனிதன்
காதல் இல்லாத மனிதன்
கால் மனிதன்!
**
அன்புக்குத்தாழ்
இல்லை
காதலுக்குக்கதவே
இல்லை!
**
பூமியில் ஒரு காதல்
ஏற்றுக்கொள்ள்ப்படுகிறபோது
வானத்தில் ஒரு நட்சத்திரம் உதிக்கிறது
மறுக்கப்படுகிறபோது
ஒரு நட்சத்திரம் மறைகிறது!
**
அன்பே சிவம்
காதலே சக்தி!
**
சொர்க்கத்தத் தேடி
நீங்கள் போக வேன்டும் என்றால்
ஆன்மிகத்தை நாடுங்கள்!
சொர்க்கம் உங்களைத் தேடி
வர வேண்டும் என்றால்
காதலை நாடுங்கள்!
**
காதல் நதியின்
அக்கரையும் பச்சை
இக்காரையும் பச்சை!
**
உலகத்தின்
முதல் பரிசுப் பொருள்
பூக்கள்தான்!
பரிமாறிக்கொண்டவர்கள்
காதலர்கள்தான்!
**
பாவத்தின் சம்பளம்
மரணம்!
புண்ணியத்தின் சம்பளம்
காதல்!
**
மனித உரிமையில்
முதல் உரிமை
காதலிக்கும் உரிமைதான்!
**
உங்களுக்காகத் துடிக்கும்
உங்கள் இதயத்துக்கு
நீங்கள் செய்யும்
நன்றிக்கடன்
அங்கே ஒரு தேவதையை
குடிவைப்பதுதான்!
**
ஏழு ஜென்மத்திலும்
காதலிக்கப்படுகிற மனிதனே
எட்டாவது ஜென்மத்தில்
கடவுளாகிறான்!
**நன்றி..தபூ சங்கர்

0 comments: