Tuesday, April 17, 2007

யாரோ சொன்னங்க... பாகம்-4

பிரிந்தவர் கூடும்
பொழுது
வார்த்தை கை விடுமாம்…
சரி விடு!
முத்தம் கை கொடுக்கும்!
***
பார்க்காமல் விட்டுவிட்டேன்
ஒருவேளை நடந்திருக்கலாம்
மனதை வருடும் மழையோ
இல்லைவானில் நட்சத்திரமோ
எதோவொன்று உணர்த்திப்
போயிருக்கலாம்
எனக்கொரு தோழி கிடைக்கப்போவதை
**
வேதனையின் போது
சாரலில் எழும்
மண்வாசனை போல்
இதமாய் இருக்கிறது
உன்
நட்பின் வார்த்தைகள்
**
சந்தோசமாய்
உன் விரல் பிடித்து
சிறுகுழந்தை போல
விளையாடிக்கொண்டே நடக்கிறது
மனது
அருகருகே
நடந்துகொண்டிருக்கிறோம் நாம்!
**

0 comments: