Friday, April 13, 2007

ஆயுளின் அந்திவரை..

தோழி
சந்தைக்குப் போனால்
எனக்காகக்கொஞ்சம்
தூக்கம்வாங்கி
வா
கனவுகள் ஒன்றிரண்டு

கலந்திருந்தால்
வரும்
வழியிலேயே
பொறுக்கிப் போட்டுவிடு..
*
சந்திப்பதற்காக

இனியும்
ஆசை வளர்க்காதே
வா
அவரவர்

இடத்திலிருந்தே
புறப்படுவோம்
எங்கேனும்
முள் தைத்தால்
வலியில் முகம் பார்த்துக்
கொள்ளலாமே
**
நம் கவிதைகளை
வானத்திற்குக்
காண்பித்தேன்
வானவில் கொடுத்து
மழை தூவி
விட்டது

மனிதர்களிடம்
காண்பித்தேன்
கண்களை
மூடிக்கொண்டு
எச்சில் துப்பிவிட்டார்கள்
**
அணுஅணுவாய்
வாழ்வதற்கு
முடிவெடுத்துவிட்ட
பிறகு
காதல்
சரியான வழிதான்.
**
இனி
பார்க்கவேண்டும்
என்கிற ஆசை
வருகிற போதெல்லாம்
அந்த வானத்தைப்
பார்த்துக் கொள்ளலாம்..

எங்காவது
ஓரிரு புள்ளியில்
நம் பார்வைகளாவது
சந்தித்துக் கொள்ளட்டுமே
**நன்றி:அறிவுமதி

0 comments: